search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chicken waste"

    • உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
    • கோழிக்கழிவுகளை சேகரித்து இப்பகுதிகளில் கொண்டு வந்து சேகரித்து வைத்து வருகிறார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் எம்.ஆர் நகர், சிவாஜி நகர், அப்துல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எம்.ஆர். நகர், சிவாஜி நகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டின் முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிக்கழிவுகளை சேகரித்து இப்பகுதிகளில் கொண்டு வந்து சேகரித்து வைத்து வருகிறார்.

    அதன்பின் இந்த கழிவுகளை ஒரு கலவையாக்கி சென்னையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் படுவதாக இப்ப குதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். கோழி கழிவுகளால் இப்பகுதி சுற்றிலும் உள்ள பொது மக்களுக்கு காற்று மாசுபடுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் இப்பகுதியினர் தொடர்ந்து வீடுகளை பூட்டி வைத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுவட்டார குடியிருப்பு வாசிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் புகார் தெரிவித்து இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    இதையடுத்து இன்று இப்பகுதியில் சேகரித்து வைத்துள்ள கோழிக்கழிவு களை அப்புறப்படுத்த கோரியும் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே இப்பணிகளை மேற்கொள் ளக்கூடாது எனவும் கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வார்டு உறுப்பினர் ராம்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட நபரின்வீடு முன்பு குவிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு காரமடை துப்புரவு ஆய்வாளர் வீரபாகு, மேற் பார்வையாளர் கார்த்தி கேயன் ஆகியோர் நேரில் வந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கோழி கழிவுகடிள அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதைய டுத்து குடியிருப்புக்கு நடுவே ஏற்படுத்தி வைத்திருந்த கொட்டகையை கிராம மக்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் 3 மணி நேரத்தில் அப்புறப்படுத்துவதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம்.
    • தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்களில், வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி கழிவுகளை குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டப்படும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

    ரேசன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் ரேசன் அரிசை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    • தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
    • வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.

    இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.

    இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .

    இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .

    ×