search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spreading"

    • கடந்த 2ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.
    • தென்னை மரங்களில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் தென்பட துவங்கியுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி, பிரதானமாக உள்ளது. கடந்த 2ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.தேங்காய்க்கு 23 முதல் 25 ரூபாய் விலை கிடைத்தால் தான் உர விலை, விவசாய தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் கூறி வந்தனர்.ஆனால் தோட்டங்களில் இருந்து தேங்காய்க்கு 8 - 9 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தொடர்ந்து விலை வீழ்ச்சி தென்பட்ட நிலையில் விவசாயிகள் தென்னை மரங்களை பராமரிப்பதில் முழு கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் காங்கயம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தென்னை மரங்களில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் தென்பட துவங்கியுள்ளது. இதனால் தென்னை மர இலைகள் காய்ந்து பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளன. ஏற்கனவே, தேங்காய் விலை வீழ்ச்சியால் ஆங்காங்கே சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் குதித்துள்ள விவசாயிகளுக்கு, இப்பிரச்சினை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது குறித்து, வேளாண் துறை மற்றும் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    இதனிடையே தென்னை விவசாயத்தில், மரத்தின் வயதுக்கு ஏற்ப ஊடுபயிர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம் என தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில், 12,500 ஹெக்டேரில் தென்னை சாகுபடி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், காய் மற்றும் பயிறு வகை சாகுபடியை காட்டிலும் தென்னை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    தென்னையில் ஊடுபயிராக மரத்தின் வயதுக்கு ஏற்ப பயிர்களை பயிரிட வேண்டும். தென்னை நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 8 வயது வரை கடலை, எள்ளு, நெல், வாழை போன்றவை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.இந்த 8 ஆண்டு காலத்தில் சூரியஒளி ஊடுபயிர்களுக்கு நன்றாக கிடைக்கும். இதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்.

    தென்னையின்8 வயது முதல் 15 வயது வரை, மரத்தின் நிழல் அதிக அளவு இருக்கும். அப்போது நிழலில் வளரும் தோட்டக்கலை பயிர்களான, உளுந்து, கொள்ளு, பாசி பயிறு, சோயா மற்றும் கால்நடை தீவன பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

    20 வயதிற்கு மேல் தென்னையில் ஊடுபயிராக, ஜாதிக்காய், வாழை, குறுமிளகு போன்றவை பயிரிடலாம். இதில் குறுமிளகு நன்கு விளைச்சல் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு செடியில் வருடத்திற்கு 2 கிலோ வரை குறுமிளகு கிடைக்கிறது.ஒரு ஏக்கர் தென்னையில் 70 மரம் வரை நடவு செய்யலாம். இதில் ஊடுபயிராக ஒரு மரத்திற்கு ஒரு குறுமிளகு செடி பயிரிட்டால் வருடத்திற்கு 140 கிலோ குறுமிளகு கிடைக்கிறது. இதில் நன்றாக வருவாய் கிடைக்கும்.ஊடுபயிர் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை தோட்டத்தின் தண்ணீர், உரம், ஆள் கூலி போன்ற செலவினங்களுக்கு பயன்படுத்தலாம். தென்னையில் கிடைக்கும் வருமானம் விவசாயிகளுக்கு முழுவதுமாக கிடைக்கும்.

    இத்தகவலை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
    • வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.

    இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.

    இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .

    இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .

    சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை இன்று டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடக்கிறது.
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வன்முறை அதிகம் நடைபெற்றுவரும் காஷ்மீரில் ஆயுத போரைப்போலவே விஷத்தை கக்கும் வார்த்தைகள், போலியான செய்திகள், புரளிகள் பரவிவருவது மாநில நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. வதந்திகள் பரவுவதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுடன், எந்தவொரு நிகழ்வுக்கும் மதச்சாயம் பூசப்படுகிறது.

    அடுத்த 2 மாதங்களுக்கு அமர்நாத் யாத்திரை நடைபெற இருக்கும் நிலையில் இதுபோன்ற போலியான செய்திகள் பரவினால் மாநிலம் முழுவதும் மதவன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் போலீசார் டுவிட்டர் வலைத்தள பயன்பாட்டாளர்கள் 5 பேர் மீதும், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தவறான தகவல் பரப்பியதற்காக அவர்களுக்கு இணையதள சேவை வழங்கிய நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீரின் இளைஞர்கள் கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலம் வீடுகளில் இருந்தோ, தெருக்களில் இருந்தோ இதுபோன்ற தவறான தகவல்களை சாதாரணமாக பரப்பிவிடுகிறார்கள். அதோடு டெல்லி போன்ற பிற மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ இருக்கும் காஷ்மீர் இளைஞர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    எனவே சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடத்துகிறது. உள்துறை செயலாளர் ராஜீவ் குப்தா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக உயர் அதிகாரிகள், தொலைதொடர்பு துறை அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விதிகளை அமல்படுத்துவது, வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்வது, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து தீங்கை ஏற்படுத்தும் கருத்துகளை உடனுக்குடன் நீக்குவது, விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை குறித்து விவாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×