search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Railway Station"

    • வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் பகுதிகளில் போட்டிகளை காணலாம்.
    • ரூ.10 கட்டணம் செலுத்தி ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது. இதுவரை 5 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை காண மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி. டிவிகள் மூலம் ரெயில் நிலையம் உள்ளே ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படுகிறது.

    வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் ரூ.10 கட்டணம் செலுத்தி போட்டிகளை காணலாம்.

    32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய ஷேர் கார் வசதியை அனைத்து பயணிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளை பஸ் நிலையம், புறநகர் மின்சார ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையங்களோடு இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதியினை ஒரு சில நிலையங்களில் அறிமுகம் செய்தது.

    கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி, ஏ.ஜி-டி.எம்.எஸ்., அண்ணாநகர் கிழக்கு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் கார் வசதி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதி நடைமுறையில் உள்ளது.

    இது தவிர பெடல் சைக்கிள் வசதி, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு நிலையங்களிலும் ஆலந்தூர், கிண்டி நிலையங்களில் எலக்ட்ரானிக் பைக் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சைக்கிள் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகளை ஊக்குவிக்கவும், அதிகப்படுத்தவும் இன்னும் வசதிகளை விரிவாக்கம் செய்து வருகிறது.

    தற்போது 5 நிலையங்களில் மட்டும் ஷேர் கார் வசதி உள்ளது. இந்த வசதியை 32 நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்துக்குள் ஷேர் கார் வசதி அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது.

    ஷேர் கார் வசதியை பெற தனியாக ஆப் வசதியை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

    ஒவ்வொரு நிலையத்திலும் 2 முதல் 6 கார்கள் வரை தேவையை பொறுத்து நிறுத்தப்படும். மீனம்பாக்கம், நங்கநல்லூர் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் 2 கார்களும், சென்ட்ரல், ஆலந்தூர் நிலையங்களில் 4 அல்லது 6 கார் வரை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பயணிகளின் தேவையை பொறுத்து இது அதிகரிக்கப்படும். குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் ஷேர் கார் செல்லக்கூடிய வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ஆக உள்ளது. புதிய ஷேர் கார் வசதியை அனைத்து பயணிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ஸ்மால் பஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது. 16 ரெயில் நிலையங்களில் தற்போது ஸ்மால் பஸ் வசதி உள்ளது. அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மாநகர போக்குவரத்து கழகத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பேசி வருகிறது.

    சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யும் வகையில் ரூ.2,500-க்கு மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்ட திட்டப் பணிகள் முழுமையாக முடிந்து விட்டது.

    விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளுக்கு 90 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டபோது கட்டணம் அதிகமாக இருப்பதாக கருத்து எழுந்தது.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தது. வரிசையில் நின்று வாங்குவதை தவிர்க்க ஸ்மார் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது.



    அதன்பின் ஒருநாள் பயணம் அட்டையை அறிவித்தது. இதில் பயணத்துக்கு ரூ.100 முன் பணமாக ரூ.50 என ரூ.150 செலுத்தி அட்டை பெற்று ஒரு நாளில் எத்தனை முறையும் பயணம் செய்யலாம். அட்டையை ஒப்படைக்கும்போது முன் பணம் ரூ.50 திரும்பி கொடுக்கப்படும்.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம், மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.2,500-யை செலுத்தி இந்த அட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் முன் பணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.

    இதில் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யலாம். இந்த அட்டை அலுவலக வேலைக்கு செல்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். #MetroTrain #MetroTrainPass
    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, ஷேர் கார் மூலம் இதுவரை 1.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பயணிகள் - பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் செல்ல வசதியாக ‘ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது.

    கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, செயிண்ட்தாமஸ் மவுண்ட் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஷேர் ஆட்டோ’ வசதிகள் உள்ளன.

    ஷேர் கார் வசதிகள் டி.எம்.எஸ், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ‘ஷேர் ஆட்டோ’, ஷேர் கார் மூலம் இதுவரை 1.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் சென்றடைந்துள்ளனர். #MetroTrain
    அண்ணா சாலையில் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை சுரங்க பாதையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain

    சென்னை:

    தற்போது கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    மேலும் அண்ணாசாலை டி.எம்.எஸ்.சில் இருந்து சென்ட்ரல் வழியாக வண்ணாரப்பேட்டைக்கு சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே இன்னும் சில வாரங்களில் ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

    அண்ணா சாலையில் அரசினர் தோட்டத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அது ஓமந்தூரார் எஸ்டேட் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அருகே அமைந்துள்ளது.

    பொதுவாக இது பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. அதனால் இங்கு பொதுமக்கள் ரோட்டை கடக்க வசதியாக சுரங்க பாதை உள்ளது.

    எனவே அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை இந்த சுரங்க பாதையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையம் வரும் பயணிகள் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி மிக எளிதாக பிளாட்பாரத்தை வந்து அடைய முடியும். அதே நேரத்தில் சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று வரவும் வசதியாக இருக்கும்.

    அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MetroTrain

    மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல கால் டாக்சியை போனில் புக் செய்யும் வசதியை அளிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்ட்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலில் பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

    மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்கு பயணிகள் எளிதாக செல்ல ரெயில் நிலைய வாசலில் ஷேர் ஆட்டோ, கார் வசதி செய்யப்பட்டது.

    குறிப்பிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் பரிட்சாத்த முறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு இந்த சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஷேர் ஆட்டோ வசதி அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ளது.

    இதன் மூலம் ரெயில் நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று பயணிகள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல கால் டாக்சியை போனில் புக் செய்யும் வசதியை அளிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

    18604251515 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு போன் செய்து கால் டாக்சியை புக் செய்யலாம். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு இந்த சேவை ரூ.15 கட்டணத்தில் வழங்கப்படுகிறது.


    அண்ணாநகர் மேற்கு ஏ.ஜி.டி.எம்.எஸ்., வடபழனி, ஆலந்தூர், கோயம்பேடு ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கால் டாக்சி புக் செய்யும் வசதி முதலில் அளிக்கப்பட இருக்கிறது.

    சாலிகிராமத்தில் இருக்கும் பயணி வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்று விரும்பினால் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு காரை புக் செய்யலாம். உடனே கார் பயணி இருக்கும் பகுதிக்கு சென்று மெட்ரோ நிலையத்திற்கு அழைத்து வரும்.

    அதே போல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லவும் காரை புக் செய்து கொள்ளலாம்.

    இந்த சேவை படிப்படியாக அனைத்து ரெயில் நிலையத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், “வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கால் டாக்சியை புக் செய்யும் வசதி பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு பதிலாக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கினால் எளிதாக இருக்கும். இதன் மூலம் கார் டிரைவர், பயணி எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதை விரைவில் அறிமுகபடுத்துவார்கள் என்று நம்புகிறோம்” என்றனர். #MetroTrain
    புரசைவாக்கத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள 33 கடைகள் மட்டுமே பாதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் நெற்குன்றம்- விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசு ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஆரம்ப கட்டப்பணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் செயல்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாதவரம்-சிறுசேரி இடையேயான வழித்தடத்தில் புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாற்றியமைக்க கோரி அங்குள்ள வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் பாதையில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலும், டவுட்டன் அருகிலும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் புரசைவாக்கம் பகுதியில் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கருதி வியாபாரிகள் தேவையில்லாமல் கடை அடைப்பு போராட்டங்களை நடத்துகின்றனர்.

    ஆனால் உண்மையில் புரசைவாக்கம் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் 33 கடைகளும், 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் மட்டுமே பாதிக்கப்படுகின்றன.

    அதேபோல் டவுட்டன் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் 45 கட்டிடங்கள் மட்டும் பாதிக்கப்படுகின்றன. இந்த கட்டிடத்தில் 144 கடைகள் உள்ளன. இவற்றுக்கான முறையான இழப்பீடு வழங்கப்படும்.

    மாறாக புரசைவாக்கம் மற்றும் டவுட்டன் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் பயனடைவார்கள்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    பயணிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. #ChennaiCentral #MetroRailwayStation
    சென்னை:

    சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.

    இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×