என் மலர்

    நீங்கள் தேடியது "Central"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசு பணிகளில் 90 சதவீத தமிழகத்தை சேர்ந்வர்களை பணியமர்த்த கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை கலெக்டரிடம் மனு

    திருச்சி:

    மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை சார்பில் அதன் தலைவர் பொன்.முருகன், துணை பொதுச்செயலாளர் ஞானசேகர் கலெக்டர் பிரதீப் குமாரிடம் அளித்த மனுவில், "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் யு.பி.எஸ்.சி. தகுதி தேர்வில் தமிழ்மொழியிலும் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்க அனுமதி அளித்தது வருந்ததக்கது.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நிர்வாகிகள் வக்கீல் சன்.மாரியப்பன், சக்தி, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்டோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

    கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

    எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
    • பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.

    4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.

    இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.

    உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்ட்ரல்-எழும்பூர் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். #Nilavembukashayam
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபம், ஓட்டல், கட்டுமான பணி இடங்கள், அரசு மற்றும் தனியார் காலி இடங்களில் மழை நீர் தேங்காதபடி அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட நில வேம்பு கசாயம் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இது தவிர சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி 5-வது மண்டலம் சார்பில் மண்டல நல அலுவலர் டாக்டர் கவுசல்யா, முதுநிலை பூச்சியல் வல்லுனர் யமுனா ஆகியோர் முன்னிலையில் பயணிகள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். சிறுவர்களுக்கும், பெற்றோர்கள் வழங்கினர். நிலவேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். நூற்றுக்கணக்கான பயணிகள் நிலவேம்பு கசாயத்தை பருகி சென்றனர்.

    மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.

    கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீஸ் குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. #Nilavembukashayam

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலுமான மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலும் இன்னும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்த 2 வழிகளில் மட்டும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

    இந்த 2 வழித்தடத்திலும் அனைத்து பணிகளையும் முடித்து டிசம்பர் இறுதியில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இன்னும் ஒரு சில பணிகள் நிறைவடையவில்லை.

    அண்ணா சாலையில் இன்னும் நிறைய கட்டுமானப் பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. 2 மாதத்தில் இந்த பணிகள் முடிவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பாக சோதனை ஓட்டம் குறிப்பிட்ட காலம் வரை நடத்தப்பட வேண்டும்.

    சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதில் உள்ள குறைகளை சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும். தற்போது சோதனை நடத்த வேண்டிய இந்த 2 வழித்தடமும் மிக முக்கியமான பகுதியாகும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.க்கும் இடையே கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிக்னல் சாப்ட்வேர் கருவிகள் வெளிநாட்டில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் சோதனை ஓட்டம் தள்ளிப் போகிறது.

    கடந்த மாதம் நடைபெற வேண்டிய சோதனை ஓட்டம் தொடங்க முடியாமல் அடுத்த மாதம் நவம்பருக்கு தள்ளி செல்கிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப கருவிகள் வருவதில் தாமதம் ஆகி வருகிறது. அடுத்த மாதம் அக்கருவிகள் வரும் என்று நம்புகிறோம். கருவிகள் வந்தவுடன் சோதனை ஓட்டம் தொடங்கும். தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய சிக்னல் சாப்ட்வேர் கருவிக்காக காத்திருக்கிறோம் என்றனர். #MetroTrain
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் விவசாயம் மற்றும் நீர் ஆதாரத்தை சேமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கி பேசினார். கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தலைவர் கே.என்.ஜவஹர் வரவேற்று பேசினார். கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் அன்னூர் ராமலிங்கம், புறநகர் தெற்கு மாவட்டத்தலைவர் பி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

    விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த ஜி.கே.மூப்பனார் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து வளர்ந்து, உயர்ந்து விளங்கியதற்கு அடிப்படையாக இருந்தது அவர் பிறந்த விவசாய மண், காவிரி மண். அந்த வகையில் தமிழ்மாநில காங்கிரஸ் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி.

    இனிமேல் காவிரியின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைத்தால் மட்டுமே பாசன கால்வாய்களில் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது கால்வாய்களின் கடைக்கோடிக்கு சென்றடையவில்லை. மேட்டூர் அணைக்கு கீழே காவிரியின் குறுக்கே தேவையான தடுப்பணைகளை கட்டியிருக்க வேண்டும். இனிமேலாவது தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் முறைப்படி காலத்தே கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    கேரளாவில் மழை, வெள்ளக்காலங்களில் ஆறுகளில் இருந்து பல நூறு டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இவற்றை தமிழக பகுதிகளில் திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்திற்கு பாசன நீர், கேரளாவிற்கு மின்சாரம் என்ற அடிப்படையில் நீர் பங்கீடு செய்திட வேண்டும்.

    மத்திய-மாநில பட்ஜெட்டுகளில் எதிர் காலங்களில் விவசாயத்திற்கும், நீர் ஆதாரத்தை சேமிப்பதற்கும், அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாய தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்.

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அமராவதி அணையின் நீர் கொள்ளளவை 4 டி.எம்.சி.யில் இருந்து 9 டி.எம்.சி.யாக அதிகரிக்க வேண்டும். அவினாசி-அத்திக்கடவு பாசன திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.

    விவசாயிகளின் விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. விலை குறையும் போது அதை ஈடுகட்டும் வகையில் விலை பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். எனவே தமிழகத்தில் இனி நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில், யாரும் வெற்றி பெற முடியாது என்ற நிலையை நாம் ஏற்படுத்துவோம். இதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.எஸ்.ஞானதேசிகன், மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், குனியமுத்தூர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஈரோடு ஆறுமுகம், சுரேஷ் மூப்பனார், சக்திவடிவேல், யுவராஜா, மாறன், கோபால், கவுதமன், மாநில செயலாளர்கள் சேதுபதி, செல்வராஜ், தொழிற்சங்க செயலாளர் தனசேகரன், இளைஞரணி செயலாளர் நடராஜ், துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியம், செழியன், பொதுச்செயலாளர்கள் பத்மநாபன், அப்துல் கலாம் அசாத், பெரியசாமி, மற்றும் முருகேஷ், தங்கராஜ், திருப்பூர் மாநகர் மாவட்டத்தலைவர் எஸ். ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்டத் தலைவர் டி.ரத்தினவேல், நீலகிரி மாவட்டத்தலைவர் சந்திரன் மற்றும் தம்பு, இளைஞர் அணி துணை தலைவர் சி.பி.அருண்பிரகாஷ், கோவை விஷ்ணு, சரத் விக்னேஷ், பொன் ஆனந்தகுமார், சி.ஆர்.ரவிச்சந்திரன், குனிசை ரவிச்சந்திரன் ராம்நகர் சக்தி முருகானந்தம், ராஜா, ராஜேஷ், மாவட்ட பொருளாளர் வளர்மதி கணேசன், காளப்பட்டி சிகாமணி, நித்யானந்தம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மழை-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் 30 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை ஜி.கே.வாசன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பயணிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. #ChennaiCentral #MetroRailwayStation
    சென்னை:

    சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.

    இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    பொன்னேரி:

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.

    அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.

    இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.

    மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை சென்ட்ரல் - நேருபூங்கா, சின்னமலை - டிஎம்ஸ் ஆகிய புதிய வழித்தடங்களில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. #ChennaiMetro
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மெட்ரோ ரெயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் - சின்னமலை மற்றும் பரங்கிமலை - நேருபூங்கா ஆகிய வழித்தடங்களில் தற்போது ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேருபூங்கா - சென்டிரல், சின்னமலை - டிஎம்ஸ் ஆகிய வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த புதிய வழித்தடத்தில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரெயில் சேவை தொடங்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரெயில் சேவையை தொடங்கி வைக்கின்றனர். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print