search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "e-shram"

    • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.
    • சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ளனர்.

    சேலம்:

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.

    இதில் கட்டுமான தொழி லாளர்கள், தெருவோர வியாபாரிகள், வேளாண் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை ஆதாருடன் இணைப்பதற்கு தேசிய அளவிலான தர வுத்தளம் உருவாக்கப்பட்டுள் ளது.

    ஆதார் தொடர்பான தகவல்கள், சொந்த விவ ரங்கள், தொடர்பு விவ ரங்கள், முகவரி தகவல், தொழில் விவரங்கள், வங்கி விவரங்கள், வாரிசாக நியமிக்கப்படுபவரின் விவரங்கள் உள்ளிட்டவை இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படு வதன் மூலம் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங் களை கொண்டு சேர்ப்பதில் உதவிகரமாக உள்ளது.

    சேலம், நாமக்கல்..

    குறிப்பாக, மத்திய அரசு விவசாயிகளுக்கு வருடத் திற்கு ரூ. 6 வழங்கி வரும் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத் தில் மட்டும் சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ள னர்.

    சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இ-ஷ்ரம் திட்டத்தில் இணைந்துள்ளனர். இது குறித்து மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்தரி பூபேந்தர் யாதவ் கூறியதாவது:-

    நாட்டில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப் பட்டு, எளிமையாக்கப்படு வதாகத் தெரிவித்தார். அந்தவகையில், 29 வகை யான தொழிலாளர் சட்டங்கள், 4 எளிதான தொழிலாளர் சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாது காப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வாயிலாக தொழிலாளர்களின் அதிகா ரமளித்தல் உறுதி செய்யும்.

    28.93 கோடி தொழிலாளர்கள்

    இ-ஷ்ரம் இணைய தளத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழில்பிரிவு களில் ஈடுபட்டுள்ள 28.93 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளனர். மேலும் பல தொழில் பிரிவுகள் இதில் சேர்க்கப்படும்.

    தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் மூலம் பல்வேறு வகையான வேலைவாய்ப்புத் தொடர்பான சேவைகள் அளிக்கப்படுகின்றன.

    இதன் மூலம் 1.39 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கான உதவிகள் அளிக்ப் பட்டுள்ளன. தேசிய வேலை வாய்ப்பு இணையதளம் இ-ஷ்ரம், உத்யம், திறன் இந்தியா ஆகிய இணைய தளங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது.

    தொழிலாளர் கொள்கை யில் சீர்தி ருத்தங்கள் செய்யப்பட்டதன் காரண மாக கடந்த 9 ஆண்டுகளில் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.) தொழிலா ளர்கள் எளிதாக பணம் எடுக்கும் முறை, ஓய்வூதிய தாரர்கள் எளிதாக வாழ் நாள் சான்றிதழ் பெறும் முறை மற்றும் பென்சன் உயர்வு உள்ளிட்டவை காரணமாக பயனடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×