search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooperative bank"

    • ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்கள் அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் ஜெயசீலி ஜூலி யட் தலைமை தாங்கினார்.

    இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் 35 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. சுய உதவி குழு ஒன்றுக்கு ரூ.12 லட்சம் கடனாக வழங்கப்பட்டது.

    மேலும் தனியார் குழுக்க ளிடம் அதிக வட்டிக்கு கடனாக பணம் வாங்கி கஷ்டப்படுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த தொகையிலான காப்பீடு திட்டம் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சந்தன கிருஷ்ணன், பணியாளர் மேக்தலின் பிரீத்தி, காசாளர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினர். உதவி பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை எந்திரத்திற்கான ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.

    • வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.
    • இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், பயிர்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில் நகை கடன் வழங்குதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பன்னீர்செல்வம் நாகப்பட்டினம் பொருளாதார குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும் ஆய்மூர் ராமர் மடத்தெருவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் அறிவழகன், எழுத்தர்கள் ஆறுமுகம், இளையராஜா, செயலாளர் (பொறுப்பு) அன்புமொழி, தற்காலிக பணியாளர் கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜார் செய்தனர். பின்னர் அவர்கள் நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

    • பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார்.

    குரும்பூர்:

    குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் மோசடி செய்த நகை, பணத்தை மீட்கக்கோரி பாதிக் கப்பட்ட மக்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில், திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த 2021 செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகை கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது.

    இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி வரை மோசடி செய்ததாக விசா ரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த மோசடி வழக்கில் வங்கி தலைவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செய லாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார். தலை மறைவாக இருந்த துணை செய லாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞான பாயும் கைது செய்யப் பட்டார்.

    இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்கள் அமைச்சர், அதிகாரிகளிடம் நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட வர்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனைத் தொடர்ந்து நேற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக உழவர் முன்னணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி னர். குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

    கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

    எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைய முயன்ற போது அலாரம் அடித்ததால் நகை, பணம் தப்பியது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில் மங்களப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக ராமசாமி என்பவரும் செயலாளராக சிலம்பன் என்பவரும் உள்ளனர்.

    நேற்று முன் தினம் மாலை அலுவலர்கள் அனைவரும் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும். இதனை நோட்டமிட்டு நள்ளிரவில் கொள்ளையர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.

    அலுவலக வாசல் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்து விட்டு பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த யு.பி.எஸ். வயரை துண்டித்து விட்டு கொள்ளையடிக்க முயன்ற போது அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது. இதனால் பயந்து போன கொள்ளையர்கள் பொதுமக்கள் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    ஆனால் இந்த கூட்டுறவு சங்கம் ஊருக்கு வெளியே இருப்பதால் அலாரம் ஒலி யாருக்கும் கேட்கவில்லை. இன்று காலை அப்பகுதியில் வந்த மக்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா, வங்கி தலைவர் ராமசாமி, செயலாளர் சிலம்பன் ஆகியோர் அங்கு வந்து லாக்கரை திறந்து பார்த்தனர். அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான நகைகளும், ரூ.21 ஆயிரத்து 165 பணமும் கொள்ளை போகாமல் தப்பியது.

    இதனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த வங்கியில் காவலாளி கிடையாது. சி.சி.டி.வி. கேமராவை மட்டும் பொருத்தி விட்டு சென்றுள்ளனர். தற்போது கொள்ளையர்கள் நூதனமாக கேமராவையே உடைத்து விட்டு கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. இது குறித்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து முக்கிய தடயங்களை பதிவு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மஞ்சூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் லாக்கரில் இருந்த நகை, பணம் தப்பியது.
    மஞ்சூர்:

    மஞ்சூர் அருகே உள்ள போர்த்தி கிராமத்தில் சுவாமி மகாலிங்கய்யா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வழக்கம்போல் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை 9.30 மணிக்கு வங்கிக்கு திரும்பியபோது முன்பக்க கதவின் பூட்டி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், எமரால்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வங்கிக்குள் சென்று போலீசார் பார்த்தபோது, அங்கிருந்த லாக்கர் பாதுகாப்பாக இருந்தது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையடிக்க வங்கிக்குள் புகுந்த மர்ம ஆசாமிகளால் லாக்கரை திறக்க முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பதிவாகும் கருவியை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாமல் போனதால், அதிலிருந்த நகை, பணம் தப்பியது என்றனர்.

    இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால், நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் எமரால்டு பகுதியில் அடகு கடையில் துளையிட்டு மர்ம ஆசாமிகள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த வங்கி கொள்ளை முயற்சியிலும் அதே ஆசாமிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 
    பழனி நகர கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் ஒட்டப்பட்ட வேட்பாளர் பட்டியலை சிலர் கிழித்து சென்றதால் இதனை கண்டித்து திமுகவினர் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.

    பழனி:

    பழனி காந்தி ரோட்டில் பஸ் நிலையம் அருகே பழனி நகர கூட்டுறவு வங்கி உள்ளது.இவ்வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளுக்கு இறுதியாக 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இப்பட்டியலை வங்கி அலுவலகம் முன்பு நேற்று பகல் ஒட்டப்பட்டது.

    அதில் தேர்தல் நடைபெறும் நாள் நேரம் மற்றும் தேர்தல் குறித்த குறிப்புகள் அடங்கியிருந்தது. இந்நிலையில் அங்கு வந்த சிலர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வேட்பாளர் பட்டியல் கிழித்து எறியப்பட்டது குறித்த தகவல் கிடைத்த திமுகவினர் பழனி நகர கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிமுகவினர் தேர்தலை நடத்த கூடாது என்று திட்டமிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க துணைபதிவாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோசமிட்டனர். அதன் பின்னர் கூட்டுறவு சங்க துணைபதிவாளர் குழந்தைவேலிடம் மனு கொடுத்துள்ளனர். அவர் அவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
    கோவை:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மேற்கு மண்டலம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு கோவை மாவட்ட தலைவர் கே.சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாநில தலைவர் செல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் கோவை மகளிர் பாலிடெக்னிக்கல்லூரி முன்பிருந்து புறப்பட்டு பாலசுந்தரம் சாலை வழியாக வ.உ.சி. பூங்காவை அடைந்தது. அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இது குறித்து சங்க மாவட்ட தலைவர் கே.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் சார்பில் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 2,200 ரேஷன் கடைகள், 600 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை செயல்படவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கு நியாயமான புதிய ஊதியம் வழங்க வேண்டும்.

    விற்பனையாளர்களுக்குரிய ஊதியத்தை மாதந்தோறும் அரசே நேரடியாக வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக போராடி வரும் விற்பனையாளர்கள், சங்க பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    காலி பணியிடங்களைநிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் முடிந்ததும் கோரிக்கைகள் குறித்து அனைவருக்கும் விளக்கி கூறப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் ஹரிகரனிடம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×