என் மலர்
நீங்கள் தேடியது "cooperative bank"
- உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும்.
உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக தமிழ்நாடு அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.
- தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.
- கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,300 வரை கடன் வழங்கப்படுகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ நெருங்கி வரும் நேரங்களில் அரசியல் கட்சியினர் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.
அதில் முக்கியமான ஒன்றுதான் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி. இது பலருக்கும் நன்மைதான் என்றாலும், தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதி கொடுப்பார்களா? என எதிர்பார்க்கும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
பொதுவாக தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்க வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகை அடமானத்தின் பேரில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,300 வரை கடன் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்த முறையும் அரசியல் கட்சியினர் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என மக்கள் உஷாராகிவிட்டனர்.
இதனால் நகைகளை எடுத்துக்கொண்டு கூட்டுறவு வங்கிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் பேருக்கு, ரூ.25 ஆயிரம் கோடி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட நகை அடமானக் கடன் தொகையை விட அதிகமாகும்.
இது குறித்து ஓய்வு பெற்ற கூட்டுறவுதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் இதுவரை நகை அடமானக்கடன் வாங்காதவர்களும் 3 பவுன் முதல் 5 பவுன் வரை நகையை அடமானமாக வைத்து கடன்பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இலக்கை விட நகைக்கு அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதேபோல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதால் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் தங்க நகைகளை விவசாய கடன் என்று கூறி பொதுமக்கள் விவசாய நிலத்திற்கான படங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் அடமானம் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் நம்பிக்கை பலிக்குமா? அல்லது பாழாய் போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
- அக்டோபர் 27-ந்தேதி எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
சென்னை:
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும். செப்டம்பர் 12-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
நவம்பர் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது.
- சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
- இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார்.
குரும்பூர்:
குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் மோசடி செய்த நகை, பணத்தை மீட்கக்கோரி பாதிக் கப்பட்ட மக்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில், திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த 2021 செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகை கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது.
இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி வரை மோசடி செய்ததாக விசா ரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த மோசடி வழக்கில் வங்கி தலைவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செய லாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார். தலை மறைவாக இருந்த துணை செய லாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞான பாயும் கைது செய்யப் பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்கள் அமைச்சர், அதிகாரிகளிடம் நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட வர்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனைத் தொடர்ந்து நேற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக உழவர் முன்னணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி னர். குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.
- இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், பயிர்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில் நகை கடன் வழங்குதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பன்னீர்செல்வம் நாகப்பட்டினம் பொருளாதார குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும் ஆய்மூர் ராமர் மடத்தெருவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் அறிவழகன், எழுத்தர்கள் ஆறுமுகம், இளையராஜா, செயலாளர் (பொறுப்பு) அன்புமொழி, தற்காலிக பணியாளர் கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜார் செய்தனர். பின்னர் அவர்கள் நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
- மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை எந்திரத்திற்கான ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.
- கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினர். உதவி பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
- பொதுமக்கள் அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் ஜெயசீலி ஜூலி யட் தலைமை தாங்கினார்.
இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் 35 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. சுய உதவி குழு ஒன்றுக்கு ரூ.12 லட்சம் கடனாக வழங்கப்பட்டது.
மேலும் தனியார் குழுக்க ளிடம் அதிக வட்டிக்கு கடனாக பணம் வாங்கி கஷ்டப்படுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த தொகையிலான காப்பீடு திட்டம் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சந்தன கிருஷ்ணன், பணியாளர் மேக்தலின் பிரீத்தி, காசாளர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
- திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகளாக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத்துள்ளனர்.
அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த எழுத்தர் சி.பெரியசாமி என்பவரும், வங்கி செயலாளர் அ.பெரியசாமி என்பவரும் மோசடி செய்து சுமார் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து உரிய தொகையை பெரிய சாமியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பொதுமக்கள் அமைதியாக இருந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி வங்கியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ்ணன் வங்கிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பொதுமக்களின புகாரின் பேரில் விசாரனை செய்த கூட்டுறவு துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரகம் எளச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு பயிர்க்கடன், நகைக்கடன், மத்தியகாலக் கடன், மாற்றுத்திறனாளி கடன், இட்டுவைப்பு கடன், உரம் மற்றும் உறுப்பினரிடம் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 அளவிற்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு அறிவுரையின் படி திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே புத்தனேந்தல் பகுதியில் பட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1977-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் மோசமான நிலையில் உள்ள பழமையான கட்டிடத்தில் இந்த சங்கம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான நகைக்கடன் உட்பட அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கியில் வீரசோழன் அருகேயுள்ள வத்தாப்பேட்டை புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) என்பவர் எழுத்தராகவும், கூடுதல் பொறுப்பு செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பாப்பாங்குளம் கூட்டுறவு செயலர் ஓய்வுபெற்ற நிலையில் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
இதற்கிடையே முத்துப்பாண்டி வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து கூட்டுறவு வங்கியை பூட்டிய நிலையில் வீடு திரும்பினார். நேற்று காலை அவர் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு மதிய வேளையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு வந்தபோது வங்கி கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் வங்கியின் அலுவலக சுவர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு முத்துப்பாண்டி அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து வங்கியை சுற்றி வந்து கட்டிடத்தை சரிபார்த்த போது கட்டிடத்தின் பின்பக்க சுவர் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் துளையிட்டிருந்ததை அறிந்தார். அதேபோல் லாக்கர் இருந்த பகுதியின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் வங்கிக்குள் சென்று லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் அனைத்தும் பத்திரமாக இருந்ததை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார் கூட்டுறவு வங்கிக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கூட்டுறவு வங்கிக்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.
தொடர்ந்து பின்பக்க சுவரை கடப்பாரையால் இடித்து துளையிட்ட கொள்ளையர்கள் வங்கிக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். பின்னர் கழிவறை அருகேயுள்ள ஜன்னல் பகுதியையும் கடப்பாரையால் இடித்து தள்ளி ஜன்னல் வழியாகவும் வங்கியினுள் நுழைய முயன்றுள்ளனர்.
ஆனால் வங்கியினுள் இயங்கி கொண்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்ததும் கொள்ளையர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்வோம் என தெரிந்து அங்கிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு சென்ற மேற்கூரையை பிரித்து லாக்கர் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள சுமார் 67 பவுன் நகைகள் தப்பியது.
கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கூட்டுறவு வங்கியில் லாக்கர் வசதி இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நகைகள் தப்பியது. மேலும் அங்கு வந்த விருதுநகர் கைரேகை நிபுணர்கள் வங்கியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்தனர். மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடந்தது.
நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடவும் முடியும்.
- அதிகபட்சமாக வீட்டுக் கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை வழங்கும் அனைத்து சேவைகளையும் மக்கள் எளிதாக பெற இயலும்.

அதன்படி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய 'கூட்டுறவு' என்ற செயலியை கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தியது.
இந்த 'கூட்டுறவு' செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதுடன் கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடவும் முடியும்.
இந்த செயலியில் பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், கடன் விண்ணப்பம், இ-வாடகை, வங்கி சேவை, உங்கள் சங்கம், இ-சேவை, மருந்தகம், கிடங்கு, நியாயவிலைக் கடை, தொடர்புக்கு, அலுவலகம் என்ற தலைப்புகளில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் 'கூட்டுறவு' செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றடைகிறது.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த 'கூட்டுறவு' செயலி மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன கடன், எப்படி விண்ணப்பிப்பது?
கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் 'கூட்டுறவு' செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலியை திறந்து, வங்கி சேவை பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து கடன் தகவல் பொத்தானை அழுத்த வேண்டும்.
அதில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இந்த பட்டியலில் கடன்களுக்கான உச்சவரம்பு, கடன் கால அளவு, வட்டி வீதம், கடனுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
அதில், அதிகபட்சமாக வீட்டுக் கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. வீட்டுக் கடன் பெற விரும்புவோர் அதனை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுக்கடன் தேர்வு செய்யப்பட்ட உடன், கூட்டுறவு சங்கம் தொடர்பான விவரங்கள் (அதாவது மாவட்டம், வட்டம், சங்கம்), வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.






