search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Location selection"

    • போக்குவரத்து அலுவலகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக் ககூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில், ராஜபாளையத்தில் புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளி யானது.

    இதைத்தொடர்ந்து அலுவலகம் தற்காலிமாக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் யூனியன் ஆபிஸ் எதிரே உள்ள கட்டிடத்தில் தொடங்க எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் ஆலோசனைப்படி இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் போக்கு வரத்து துணை ஆணையர் ரவிச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ராஜபாளையம் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வாடகைக்கு கட்டிடத்தில் தொடங்கப்பட்டு பின் அலுவலகத்திற்கென தனியாக புதியதாக சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

    இதில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணை அமைப்பாளர் இக்சாஸ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மாணவரணி நாகேஷ்வரன் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதியுடன் விரைவில் 10 திட்டங்களும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கப்படும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    சுரண்டை:

    சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டிய 10 திட்டங்கள் என்னென்ன என ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் கேட்டிருந்தார். தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் எதிர்பார்க்கும் 10 அடிப்படை திட்டங்கள் குறித்து கடிதம் வழங்கியிருந்தார்.

    இந்த நிலையில் சுரண்டையில் பஸ் டெப்போ அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய பழனி நாடார் எம்.எல்.ஏ., சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளின் வணிக மேலாளர் சாலமோன், மண்டல வணிக மேலாளர் சசி, உதவி மேலாளர் இயக்கம் சண்முகம், ஏடி அழகிரி மற்றும் கவுன்சிலர்கள் வேல் முத்து, அமுதா சந்திரன்,காங்கிரஸ் நிர்வாகிகள் சவுந்தர், அரவிந்த், பிரபாகர், தர்மர் ஆகியோர் சுரண்டை பங்களாச்சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தையும், ஆணைகுளம் ரோட்டில் உள்ள புறம்போக்கு இடங்களையும் ஆய்வு செய்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதியுடன் விரைவில் 10 திட்டங்களும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கப்படும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ×