search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intellectual"

    • சீக்கிரம் படுத்து தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மை அதிகம் இருக்கும்.
    • தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும்.

    தூக்கத்திற்கும், மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமன் இல்லாதவர்களாகவும், சோம்பல் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.

    9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி தூங்கும் நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதன்படி இரவில் காலதாமதமாகத் தூங்கி காலையில் மிகவும் தாமதமாக எழும் குழந்தைகளை விட, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் எடை கச்சிதமான அளவில் இருந்ததாம்.

    `சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்' என்கிறார், இந்த ஆய்வை நடத்திய கரோல் மகேர்.

    மேலும், `தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும். தாமதமாகத் தூங்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட, மூன்று மடங்கு அதிகமாக டி.வி. பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் ஈடுபாடு கொள்வதிலும் நேரத்தை செலவழிப்பார்கள்' என்கிறார் டாக்டர் கரோல். ஆகவே 'முன் தூங்கி முன் எழுவதே உடலுக்கு நல்லது' என்கிறார் கரோல்.

    சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மையும் அதிகமாக இருக்கும்.

    • சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
    • இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மையம் தரைதளம், முதல் தளம் ஆகிய 2 தளங்களை கொண்டது.

    தரை தளத்தில் 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்மையத்தில் சிறப்பு அம்சங்களான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா, 75 இஞ்ச் எல்.சி.டி 2 தொலைக்காட்சி, 2 புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனர்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி புரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறை வசதிகள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்து தொடர்ந்து மையத்தை நன்கு பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது செயற் பொறியாளர் கு.செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர். 

    • விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.

    இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

    புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.

    ×