search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "share auto"

    • யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி, அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 50). இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வை வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இரவு தனது வீட்டின் முன் ஆட்டோவை சரவணன் நிறுத்தியிருந்தார். இரவு 10 மணயளவில் ஷேர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.

    இதனால் வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஆட்டோவுக்குள் அமர்ந்து ஒயர்களை பிரித்துக் கொண்டிருந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார். இதில் சுதாரித்த சரவணன் திருடன் திருடன் என சத்தம் போட அப்பகுதியினர் அங்கு திரண்டர். அந்த நபரை சுற்றி வளைத்து கைகளால் தாக்கினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பாலா (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
    • போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஷேர் ஆட்டோக்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் தான் பொதுமக்களும் ஷேர் ஆட்டோக்கள் நாடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை நகரில் குறுகிய அளவிலான சாலைகளே அதிகளவில் உள்ளது. இதில் ஷேர் ஆட்டோக்கள் நடுவழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.

    குறிப்பாக ஷேர் ஆட்டோக் களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யாரேனும் பயணி அழைத்தால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி அந்தப் பயணியை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குவது நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அத்துடன் பல இடங்களில் பயணிகள் இறங்கிய பின்பு கூடுதல் கட்டணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், கீழவாசல், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர், தெற்குவாசல், காமராஜர் சாலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களி லேயே நெடுநேரம் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணி களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மேலும் சாலை குறுகலாக உள்ள வில்லாபுரம், அவனியாபுரம் சிக்கந்தர் சாவடி, முடக்குசாலை, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் போக்கு வரத்து கண்காணிப்பு மையங்களில் இருந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும், அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்வதில்லை.

    தற்போது பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களில் இளம் வயதினரே டிரைவராக உள்ளனர். அவர்கள் விதி முறைகள் குறித்த எவ்வித அக்கறையோ, அச்சமோ இல்லாமல் தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குகின்றனர். மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவரை ஒருவர் முந்திச் செல்கின்றனர்.

    அதிகளவில் பயணிகள் இருக்கும் போது ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க காலை, மாலை வேளைகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலையை மறித்துச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்கி சவாரி செல்வதாக புகார் எழுந்துள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இளம் டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பஸ்களில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விரைவாக செல்லக்கூடிய பகுதிகளுக்கு செல்லவும் பஸ்களுக்கு பதிலாக ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.
    • ஷேர் ஆட்டோக்கள் தினமும் மொத்தம் 16.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றன என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில்களும், மாநகர பஸ்களும் திகழ்கின்றன. அடுத்ததாக ஷேர் ஆட்டோக்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை பிடித்துள்ளது.

    ஆனால் ஷேர் ஆட்டோக்களை பொது போக்குவரத்து வாகனமாக அரசு இதுவரையில் ஏற்கவில்லை. ஆனாலும் மக்களின் பயன்பாட்டில் மாநகர பஸ்களுக்கு அடுத்த இடத்தில் இவை உள்ளன.

    பொதுமக்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்களை இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்கு படுத்தவும், அங்கீகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதனை பொது போக்குவரத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையமும் முடிவு செய்துள்ளது.

    சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் இடைநிலை போக்குவரத்து திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஷேர் ஆட்டோக்களின் இயக்கம், கடைசி மைல் இணைப்பு மற்றும் மாநகர பஸ்கள் சேவை இல்லாத பகுதிகளுக்கு இணைப்பை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

    சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மாநகர பஸ்களுக்கு போட்டியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பஸ்கள் செல்லக்கூடிய வழித்தடங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் அதனுடைய வருமானம் குறைகிறது.

    பஸ்களில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விரைவாக செல்லக்கூடிய பகுதிகளுக்கு செல்லவும் பஸ்களுக்கு பதிலாக ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.

    இத்திட்டத்தின் கீழ் பஸ்களை இயக்க முடியாத பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்களை மாற்றவும் கட்டணத்தை நிர்ணயித்து பொது போக்குவரத்தாக ஒழுங்குபடுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    2013-ம் ஆண்டு பொது கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஷேர் ஆட்டோக்களை தினமும் பயன்படுத்துகின்றனர். 12 ஆயிரம் ஷேர் ஆட்டோக்களில் தினமும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான பேர் பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றது.

    ஷேர் ஆட்டோக்கள் தினமும் மொத்தம் 16.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றன என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களை 65 சதவீதம் பேர் தினமும் பயன்படுத்துகின்றனர். 87 சதவீதம் பேர் இறுதி இலக்கை அடைய பயன்படுவதாக தெரிய வருகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ஏற்கனவே ஷேர் ஆட்டோக்களை இயக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (வயது 55). இவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவில் தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே சென்றபோது லேசான காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த 50 ஆண்டுகள் பழ–மை–யான புளிய மரம் திடீரென ஷேர் ஆட்டோவின் மீது சாய்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மரக்கிளைகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா, தீயணைப்பு வீரர் கார்த்தி–கேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரக்கி–ளையை அப்புறப்ப–டுத்தி ஷேர் ஆட்டோவை வெளியே எடுத்தனர். சாலையோரம் இருந்த புளியமரம் ஷேர் ஆட்டோ–வில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விபத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    நாமக்கல்:


    நாமக்கல் பரமத்திசாலை காவேட்டிபட்டி அருகே ஷேர்ஆட்டோவும் காரும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


    காரை ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த தாமரைச்செல்வன் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, ஷேர் கார் மூலம் இதுவரை 1.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பயணிகள் - பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் செல்ல வசதியாக ‘ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது.

    கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, செயிண்ட்தாமஸ் மவுண்ட் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஷேர் ஆட்டோ’ வசதிகள் உள்ளன.

    ஷேர் கார் வசதிகள் டி.எம்.எஸ், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ‘ஷேர் ஆட்டோ’, ஷேர் கார் மூலம் இதுவரை 1.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் சென்றடைந்துள்ளனர். #MetroTrain
    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். #MetroTrain
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    பயணிகள் வசதிக்காக முக்கியமான நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டம் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    திருமங்கலம், கோயம்பேடு, அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், பரங்கிமலை, சின்னமலை, கிண்டி ஆகிய 8 நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதியும், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர், ஏ.ஜி.டி.எம்.எஸ். ஆகிய 5 நிலையங்களில் ஷேர் கார் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் ஆட்டோவிற்கு ரூ.10, காருக்கு ரூ.15 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ரூ.5 குறைக்கப்பட்டது. பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பஸ் நிலையம், நிறுத்தங்களுக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

    ஷேர் ஆட்டோவில் 27,562 பயணிகளும், ஷேர் காரில் 6,304 பயணிகளும் பயணித்துள்ளனர். கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 8166 பயணிகள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருமங்கலத்தில் இருந்து 4,995 பேர் பயணம் செய்தனர். ஆலந்தூர் நிலையத்தில் இருந்து 3,407 பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    ஷேர் கார் வசதியை ஏ.ஜி.டி.எம்.எஸ். நிலையத்தில் இருந்து 1,715 பேர் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த படியாக கோயம்பேடு நிலையத்தில் இருந்து 1,593 பயணிகள் காரில் பயணம் செய்துள்ளனர்.

    விழிப்புணர்வு, பண்டிகை காலங்களில் பாரம்பரிய போட்டிகள் நடத்தி பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. #MetroTrain
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #PetrolDiesel #PetrolDieselPriceHike
    சென்னை:

    சென்னை மாநகர மக்களின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ‘ஷேர்’ ஆட்டோ பயணம். பொது போக்குவரத்து வசதி பல இருந்தாலும் உடனுக்குடன் சிறிது தூர பயணத்துக்கு சாதாரண, நடுத்தர மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நாடுகிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருப்பதால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.10 ஆக இருந்த ஷேர் ஆட்டோ கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதேசமயம் இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் இருமடங்காக உள்ளதே... என்று வேதனைப்பட்டு வந்த பயணிகளுக்கு, இந்த ‘திடீர்’ கட்டண உயர்வு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து ‘ஷேர்’ ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், “பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வருமானம் அவ்வளவாக இல்லாத சூழ்நிலையில், தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எங்களை கவலையடையச் செய்துள்ளது. முன்பு தினசரி ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.400 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. வேறு வழியின்றி முதற்கட்டமாக ரூ.5 கட்டணம் உயர்த்தி இருக்கிறோம். பெட்ரோல்-டீசல் விலை இன்னும் உயரும் பட்சத்தில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணமும் உயர வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

    இதற்கிடையில் ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி கட்டணமும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பிறகு ஆட்டோ டிரைவர்கள் ரூ.10 வரை கூடுதல் கட்டணத்தை கேட்டு பெறுகிறார்கள். சில டிரைவர்கள் பயணத்துக்கு முன்பே கூடுதல் கட்டணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.  #PetrolDiesel #PetrolDieselPriceHike
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    சென்னை மாநகர மக்களின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ‘ஷேர்’ ஆட்டோ பயணம். பொது போக்குவரத்து வசதி பல இருந்தாலும் உடனுக்குடன் சிறிது தூர பயணத்துக்கு சாதாரண, நடுத்தர மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நாடுகிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருப்பதால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.10 ஆக இருந்த ஷேர் ஆட்டோ கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதேசமயம் இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் இருமடங்காக உள்ளதே... என்று வேதனைப்பட்டு வந்த பயணிகளுக்கு, இந்த ‘திடீர்’ கட்டண உயர்வு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து ‘ஷேர்’ ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், “பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வருமானம் அவ்வளவாக இல்லாத சூழ்நிலையில், தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எங்களை கவலையடையச் செய்துள்ளது. முன்பு தினசரி ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.400 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. வேறு வழியின்றி முதற்கட்டமாக ரூ.5 கட்டணம் உயர்த்தி இருக்கிறோம். பெட்ரோல்-டீசல் விலை இன்னும் உயரும் பட்சத்தில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணமும் உயர வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

    இதற்கிடையில் ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி கட்டணமும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பிறகு ஆட்டோ டிரைவர்கள் ரூ.10 வரை கூடுதல் கட்டணத்தை கேட்டு பெறுகிறார்கள். சில டிரைவர்கள் பயணத்துக்கு முன்பே கூடுதல் கட்டணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர். 
    மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவை இன்று தொடங்கியது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    முதலில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை சேவை தொடங்கப்பட்டது. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்கிறார்கள்.

    கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. மேலும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தங்கள் பகுதிக்கு செல்ல வேறு போக்குவரத்து சேவையை பயன்படுத்த வேண்டி உள்ளது என்று பயணிகள் கூறினர்.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவையை தொடங்குவதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது.

    இதற்காக சில மெட்ரோ ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி இன்று அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, சின்னமலை, நந்தனம், திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் டவர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது.

    இதேபோல் கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, ஏ.ஜி-டி.எம்.எஸ். மற்றும் வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் டாக்சி சேவை இயக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலான இடங்களுக்கு இயக்கப்படும். ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ.10, டாக்சி சேவைக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு பயணிகள் நடந்து செல்லும் நிலை இருந்தது. தற்போது மெட்ரோ ரெயில் நிலைய வாசலிலேயே ஷேர் ஆட்டோ, டாக்சி சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் மிகுந்த வசதியாக இருப்பதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், “வேலை முடிந்து மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்ல வேண்டியதிருந்தது. தற்போது ஷேர் ஆட்டோ, டாக்சி சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் வீடு திரும்ப வசதியாக இருக்கிறது. இதனால் வீட்டுக்கு சீக்கிரம் சென்று விடமுடியும். கட்டணமும் குறைவாக இருக்கிறது” என்றனர். #MetroTrain
    ×