search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol diesel price hike"

    கருங்கல் அருகே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள வகுத்தான்விளையைச் சேர்ந்தவர் பொன் ஷோஜின் ராஜ். இவர் சவுதி அரேபியாவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பெனிற்றா என்பவருக்கும் நேற்று திக்கணங்கோடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் புதுமண தம்பதிகள் கருங்கலில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

    மாலையில் அவர்கள் கருங்கல் கருமாவிளையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக இரண்டு காளை மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்தின் முன் கேரள ஆண், பெண் கலைஞர்கள் சிங்காரி மேளம் முழங்கிச் சென்றனர். புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்ததை கண்ட பொதுமக்கள் அதனை ஆச்சர்யமாக பார்த்து சென்றனர்.

    மணமகனின் தந்தை ராஜா காங்கிரஸ் பிரமுகர் ஆவார். அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியதைப் போல மாட்டு வண்டியில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். அதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மணமக்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாட்டு வண்டியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம் என்று கூறினார்.
    சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல் என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

    5 மாநில தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வுக்கு ஏற்பவே பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசுக்கு எதுவும் இல்லை.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு எந்த கட்சியுடனும் பிரச்சனை இல்லை. இங்கு, இறப்பை முன்வைத்து அரசியல் செய்வது போன்ற மோசமான நடவடிக்கை எதுவும் இல்லை.

    தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் என்று கூறியுள்ளார். அந்த கப்பலில் தான் அவர் இதுவரை துணை கேப்டனாக இருந்தார்.


    இலங்கையில் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் அங்குள்ள தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் சுமூக உறவு ஏற்பட்டால் நல்லதுதான்.

    குமரிமாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியிருக்கிறார். ஒரு திட்டத்தின் மொத்த மதிப்பீடு என்ன என்பதை கூட தெரியாமல் கூறியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இது பற்றி பேசுபவர்கள் எந்த திட்டத்தில் எவ்வளவு ஊழல் என்பதை தெளிவாக கூற வேண்டும். இது பற்றி நான் அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளேன்.

    குமரி மாவட்டத்தில் ஒரு திட்டங்கள் கூட நடைபெறாத போது வராதவர்கள் இப்போது வந்துள்ளார்கள். இங்கு மதம், ஜாதி பிரச்சனையை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
    5 மாநிலங்களில் பின்னடைவை சந்தித்தாலும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #Election2018
    சேலம்:

    சேலம் விமான நிலையத்தில் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தொண்டர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுவது கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. சற்று பின்னடைவை சந்தித்திருந்தாலும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் அந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க அதிக அளவில் வெற்றி பெறும்.

    பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை பத்து ரூபாய்க்கு மேல் மத்திய அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. கடந்தகால ஆட்சிகளில் இது போன்று பெரிய அளவில் விலையை குறைத்தது இல்லை. மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

    பேட்டரி கார் தயாரிப்பு, 5 இடங்களில் எத்தனால் தொழிற்சாலை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறையும்.



    கஜா புயல் பாதிப்பு குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி உடனடியாக மத்திய குழுவை அனுப்பியதுடன் மின் பாதிப்புகளை சரிசெய்ய ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்தார். கஜா பாதிப்பில் அரசியல் செய்யாமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.

    மேகதாது பிரச்சனையில் ஸ்டாலின், திருநாவுக்கரசு ஆகியோர் அரசியல் செய்யாமல் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து மேகதாது திட்டத்தால், தமிழகம் பாதிக்கப்படும் என கூற வேண்டும். சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்த போது மேகதாது பிரச்சனை குறித்து பேசியதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பது குறித்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    சென்னையில் பெட்ரோ, டீசல் விலையில் இன்றும் சரிவு காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் சர்வதேச விலைக்கு ஏற்ப அன்றாடம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80-ஐ தாண்டியது, டீசல் விலை லிட்டர் ரூ.76 ஆக அதிகரித்தது. கடந்த 14-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருகிறது.

    14-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.42 ஆகவும், டீசல் ரூ.76.30 ஆகவும் இருந்தது. அதன்பிறகு 17-ந்தேதி பெட்ரோல் ரூ.79.87 ஆகவும், டீசல் ரூ.75.82 ஆகவும் குறைந்தது.

    தொடர்ந்து 40 காசு, 20 காசுகள் என குறைந்து கொண்டே வந்தது. 20-ந்தேதி பெட்ரோல் லிட்டர் ரூ.79.31-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.31-க்கும் விற்கப்பட்டது. நேற்று வரை ஏற்ற இறக்கம் இல்லாமல் 3 நாட்களாக இதே விலை நீடித்தது.

    இன்று பெட்ரோல்-டீசல் விலை மேலும் சரிந்தது. பெட்ரோல் விலையில் 42 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.78.46 ஆகவும், டீசல் விலையில் 44 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.74.55 ஆகவும் விற்கப்பட்டது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. #FuelPrice
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன. இன்று 19-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #FuelPrice
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன.

    இன்று (திங்கட்கிழமை) 19-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 23 காசுகள் குறைத்து எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.61க்கு விற்கப்படுகிறது.

    டீசல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.77.34 ஆக உள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

    டெல்லியில் சென்னையை விட பெட்ரோல்-டீசல் விலைகள் சுமார் ரூ.2 வரை குறைவாக உள்ளது. கடந்த 19 நாட்களில் தொடர்ச்சியாக விலை குறைந்ததால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.50 வரை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #FuelPrice
    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது. இதேபோன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. #FuelPrice #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

    இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது.  இதனை அடுத்து தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக இவற்றின் விலை குறைந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.

    இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது.  இதேபோன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. #FuelPrice #Petrol #Diesel
    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். #BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    மாதவரம்:

    செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது மத்திய அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது பெட்ரோல், டீசல் விலைஉயர்வு. 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக மக்களை சந்திக்க இன்னும் 120 நாட்கள் உள்ளது. அப்போது 15ரூபாய் வரை குறையும்.

    சபரிமலையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. அனைத்து மசூதிகளிலும் அகமதியா முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூற முடியுமா? இரண்டு வரி புத்தகத்தை படித்து விட்டால் போதுமா?

    தூத்துக்குடியில் கலவரம் நடக்க சர்ச்சில் இருந்த பங்குத்தந்தை ஜெயசீலன் தான் காரணம். தேவாலயத்தில் மணி அடித்து விட்டு ஆயுதங்களுடன் புறப்பட்டு சென்ற பிறகே கலவரம் நடந்தது.


    முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நவம்பர் 29-ந் தேதிக்கு பிறகு கைது செய்யப்படுவார். திகார் ஜெயிலில் களி தின்னும் போது கருப்பு பணம் குறித்து ப.சிதம்பரத்திற்கு அப்போது தெரியும்.

    அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும் கொள்ளையர்கள், கிரிமினல்கள். அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்க சபரிமலை ஐயப்பனை வேண்டுகிறேன்.

    நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதாக கூறி சபரிமலையில் ரெஹானா என்ற பெண்ணை காவல்துறை உடையில் அழைத்து சென்ற கேரள அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காரைக்குடியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பேசிய எச்.ராஜா, ஐகோர்ட்டை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவர் ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். இப்போது அவர் சபரிமலை விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டை விமர்சித்துள்ளார்.#BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்று ஆறாவது நாளாக குறைந்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.53க்கு விற்கப்பட்டது. #PetrolPrice
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்று ஆறாவது நாளாக குறைந்துள்ளது.

    கடந்த 2 மாதமாக உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளாலும் இந்தியாவுக்கு சிக்கல் உருவானது.

    இந்த தடுமாற்றங்களில் இருந்து தற்போது இந்தியா மீண்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோலியம் பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கியுள்ளன.

    பெட்ரோல், டீசல் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) 6-வது நாளாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 11 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.53க்கு விற்கப்பட்டது. சில நிறுவனங்களின் நேரடி பங்குகளில் 84 ரூபாயாக இருந்தது.

    டீசல் விலையில் இன்று லிட்டருக்கு 7 காசுகள் குறைக்கப்பட்டன. இதனால் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.57ம் டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகள் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #PetrolPrice
    பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #PetrolPumpsStrike #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் பங்குகள் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விநியோக மையங்கள் மூடப்பட்டுள்ளன.

    இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் மிரட்டல் காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

    இதுபற்றி டுவிட்டரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-


    ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை பாஜகவினர் மிரட்டியுள்ளனர். ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எண்ணெய் நிறுவனங்களும் மிரட்டி உள்ளன.

    நான்கு பெருநகரங்களில் டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு. அதிகபட்ச விலை இருந்தும்கூட மும்பையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனென்றால் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘பாஜக இந்த ஸ்டிரைக்கை நடத்துவதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு ஆதரவு அளிப்பதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர்’ என கெஜ்ரிவால் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.  #PetrolPumpsStrike #Kejriwal
    சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #FuelPrice #DharmendraPradhan
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, சமீபத்தில் லிட்டருக்கு தலா ரூ.2.50-ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களும் தங்கள் வரியில் சிறிது குறைத்தன. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைந்தது.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு மீண்டும் விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்தது.
     
    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக கூறியதாவது,



    பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது.

    மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 ரூபாய் வரை குறைத்தது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு மாநில அரசுகளும் விலையை மேலும் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுத்தன.

    ஆனாலும், டெல்லி உள்ளிட்ட சில அரசுகள் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அது ஏன் என்று சம்பந்தப்பட்ட அரசுகளிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார். #FuelPrice #DharmendraPradhan #PetrolDieselPriceHike 

    சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.50-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருதல், கச்சா எண்ணெய் உற்பத்தி சற்று குறைதல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.
     
    மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்ததை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 



    இதையடுத்து, கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.

    சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் ரூ.78.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும்  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 24 காசுகள் உயர்ந்து, 85.50 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம் என்றும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயராக உள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #EVKSElangovan #ParliamentElection
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    முன்னதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாறு காணாத வகைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. யானைப்பசிக்கு சோளப்பொரியை போடுவது போல் மத்திய அரசு ரூ 1.50 மட்டும் குறைத்து உள்ளது.

    தேர்தலுக்கு பயந்தே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை இந்த அரசு தள்ளி வைத்துள்ளது. முதல்வரை கேட்டால் தலைமை செயலாளரை கைகாட்டுகிறார். முதல்வர் சொல்லித்தான் ஒரு தலைமை செயலாளர் செயல்பட முடியும் என கூற விரும்புகிறேன்.


    டெல்லியில் பிரதமரை சந்திக்க முதல்வர் செல்கிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மோடியை சந்திக்க செல்கிறாரே....தவிர பொதுமக்களின் நலனுக்ககாக அல்ல.

    நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் நடிகர்களாக நடித்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம். காங்கிரஸ் கட்சி அதை சந்திக்க தயராக உள்ளது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் கிடையாது. தலைவர் யார் என்பதை தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #EVKSElangovan #ParliamentElection #TNAssemblyElection

    ×