search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை தீர்ப்பு பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சை பேச்சு
    X

    சபரிமலை தீர்ப்பு பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சை பேச்சு

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். #BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    மாதவரம்:

    செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது மத்திய அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது பெட்ரோல், டீசல் விலைஉயர்வு. 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக மக்களை சந்திக்க இன்னும் 120 நாட்கள் உள்ளது. அப்போது 15ரூபாய் வரை குறையும்.

    சபரிமலையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. அனைத்து மசூதிகளிலும் அகமதியா முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூற முடியுமா? இரண்டு வரி புத்தகத்தை படித்து விட்டால் போதுமா?

    தூத்துக்குடியில் கலவரம் நடக்க சர்ச்சில் இருந்த பங்குத்தந்தை ஜெயசீலன் தான் காரணம். தேவாலயத்தில் மணி அடித்து விட்டு ஆயுதங்களுடன் புறப்பட்டு சென்ற பிறகே கலவரம் நடந்தது.


    முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நவம்பர் 29-ந் தேதிக்கு பிறகு கைது செய்யப்படுவார். திகார் ஜெயிலில் களி தின்னும் போது கருப்பு பணம் குறித்து ப.சிதம்பரத்திற்கு அப்போது தெரியும்.

    அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும் கொள்ளையர்கள், கிரிமினல்கள். அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்க சபரிமலை ஐயப்பனை வேண்டுகிறேன்.

    நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதாக கூறி சபரிமலையில் ரெஹானா என்ற பெண்ணை காவல்துறை உடையில் அழைத்து சென்ற கேரள அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காரைக்குடியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பேசிய எச்.ராஜா, ஐகோர்ட்டை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவர் ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். இப்போது அவர் சபரிமலை விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டை விமர்சித்துள்ளார்.#BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    Next Story
    ×