என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் அருகே பரபரப்பு ஷேர் ஆட்டோவை திருட முயன்ற சென்னை வாலிபருக்கு தர்ம அடி
- யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி, அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 50). இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இரவு தனது வீட்டின் முன் ஆட்டோவை சரவணன் நிறுத்தியிருந்தார். இரவு 10 மணயளவில் ஷேர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.
இதனால் வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஆட்டோவுக்குள் அமர்ந்து ஒயர்களை பிரித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார். இதில் சுதாரித்த சரவணன் திருடன் திருடன் என சத்தம் போட அப்பகுதியினர் அங்கு திரண்டர். அந்த நபரை சுற்றி வளைத்து கைகளால் தாக்கினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பாலா (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்