என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி தாக்குதல்"
- ஆத்திரமடைந்த மருமகள் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
- படுகாயமடைந்த ராஜேந்திரன் கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்தில் மருமகள், அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி ராஜேந்திரனின் மகன் இறந்துவிட்ட நிலையில் அவரது மருமகள் ஜெயபிரியா வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த விவசாயி ராஜேந்திரன் மருமகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மருமகள், அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவசாயி ராஜேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது28). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி அமுதா என்பவருக்கும் இடையே பொதுகிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமுதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவசக்தி, சாந்தி, கலியன் ஆகியோர் சேர்ந்து ஜெயராமனை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார், அமுதா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






