என் மலர்
நீங்கள் தேடியது "Neet PG"
- 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது
- இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.
இதையடுத்து நீட் தேர்வு எழுதினாலே மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியும் என்ற நிலை உருவானது.
இந்நிலையில், EWS (ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம்) பிரிவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த 140 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட உயர்சாதி ஏழைகளே, EWS பிரிவில் வருவார்கள் என மத்திய அரசின் சட்டம் கூறும் அவர்களால் எப்படி வருடத்திற்கு 1 கோடி கட்டணம் செலுத்தமுடியும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- ஆகஸ்ட் 3ஆம் தேதி மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.
- தேர்வு நடைபெற இருக்கும் இடங்கள் குறித்த விவரம் இ-மெயில் மூலம் அனுப்பப்படும் என அறிவிப்பு.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான NEET PG 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் தங்களுக்கு எந்த இடத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் இ-மெயில் மூலம் வருகிற 21ஆம் தேதி அனுப்பப்படும். விண்ணப்பத்தாரர்கள் தேர்வு நடைபெறும் இடத்தை மாற்றுவதற்கு ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
ஹால் டிக்கெட் ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும். அதில் தேர்வு எழுதக்கூடிய மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை +91-7996165333 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணை natboard.edu.in and nbe.edu.in ஆகிய இரண்டு இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவு செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும்.
- நீட் தேர்வை இரண்டு ஷிப்ட் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- இரண்டு வினாத்தாள் ஒரே மாதிரியான சிரமம், எளிமையை கொண்டிருக்காது என்பதால் எதிர்த்து மனுத்தாக்கல்
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஜூன் 15ஆம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட இருக்கிறது. தேர்வை இரண்டு முறையாக (two shifts) அதாவது காலை மற்றும் மாலை என இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்டால் சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியான சிரமம் அல்லது எளிமையைக் கொண்டவை என்று ஒருபோதும் கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
- உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
- தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.
இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த பலர் முழு மதிப்பெண் பெற்றார்கள் என்றும் சுமார் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீட் முறைகேடு விவகாரம் சர்ச்சையான நிலையில், நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் வரிசையில், இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நீட் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தற்போது நீட் முதுநிலை தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இது நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கல்வி அமைப்பு முழுமையாக சீரழிக்கப்பட்டதற்கு மற்றொரு சரியான எடுத்துக்காட்டு ஆகும்.
பா.ஜ.க. ஆட்சி காலத்தில் மாணவர்கள் படிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை, மாறாக தங்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மோடி, இந்த முறை வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை மாஃபியா விவகாரத்தில் எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
நரேந்திர மோடியின் தகுதியற்ற ஆட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டாயம் காப்பாற்றியே ஆகவேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
- தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம்.
- குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் தேர்வை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தலைமை நீதபிதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது" எனத் தெரிவித்தது.
முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான NEET-UG தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தது.






