search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neet Issue"

    • மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
    • எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில், "இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே உள்ளன."

    "மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பில், மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்பதற்கு அர்த்தம், நீட் எழுதி இருந்தாலே போதும் என்பது தான். அவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்."

    "எம்.பி.பி.எஸ். தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரம்பும்."

    "நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலிலும், அடுத்தடுத்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெறுவர். நீட் தேர்வு மதிப்பெண்ணிற்கு ஏற்ற வகையில், அவர்கள் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் சேர முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி போதுமானது என்பதால் தான் ஜூரோ பெர்சண்டைல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.

    கடந்த ஆண்டு இந்தியாவில் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்களே 64 ஆயிரத்து 059 ஆகும். இதில் 4 ஆயிரத்து 400 இடங்கள் காலியாகவே இருந்தன. 2021-22 ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 60 ஆயிரத்து 202 ஆக இருந்தது. இதில் 3 ஆயிரத்து 744 இடங்கள் காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது.
    • நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-வினர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது," என்று குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

     

    இது தொடர்பாக பேசிய அவர், "மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அறிந்து கொள்ளவும்."

    "நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை," என்று தெரிவித்து இருக்கிறார்.

     

    தெலுங்கானா கவர்னர் கூறியிருப்பது போன்று பெர்சண்டேஜ் மற்றும் பெர்சண்டைல் இடையே உண்மையில் பெரிய வித்தியாசம் உண்டு. பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.

    பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள்- 89,90,90,91,92, 96,98,98,99. இதில் 50வது பெர்சண்டைல் 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர்.

    இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள்- 18,22, 34, 35, 36, 40,41,41,42 என்று இருந்தால், 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர். நீட் நுழைவு தேர்விலும் நெகடிவ் மதிப்பெண் உண்டு.

     

    ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி.

    அந்த வகையில் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி, மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்பதே பொருள்.

    • ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி.
    • பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம்.

    இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நாடு முழுக்க அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை அதிக சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. எனினும், சர்ச்சைகளோடு, சேர்த்து நீட் தேர்வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

    நீட் தேர்வில் பங்கேற்கும் தமிழக மாணவர்களில் பலர் சமீப காலங்களில் அதிகளவில் தேர்ச்சி பெற துவங்கி உள்ளனர். தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகளும் முற்றுபெறாமல், தொடர் கதையாகவே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது.

     

    இது தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பங்கேற்போர் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற்றாலும் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுக்க அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    2016ஆம் ஆண்டு 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக அன்று பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதிய மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்ததால் இந்த விதியால் பிரச்சனையும் எழவில்லை.

    ஆனால், இம்முறை பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாகவே மதிப்பெண் எடுத்துள்ளார்கள். எனவே பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்றால் இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாது.

    எனவே இவர்களுக்காக, பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான சேர்ந்தவர்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள். ஆனால், 2023-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவு தேர்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் கூட எடுக்காமல் நெகடிவ் மதிப்பெண் எடுத்திருப்பவர்கள் 2017-க்கு பிறகு நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள்.

     

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை எடுத்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற மத்திய அரசின் புதிய அறிவிப்பின் மூலம், நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயின்றவர்களால், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மேலும், நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்களால் பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியாத நிலை இருப்பதால் தான், இந்த சட்ட திருத்தம் இயற்றப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

    ×