search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neetexam"

    • தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
    • திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். வருகிற 20-ந் தேதி திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மருத்துவர் அணி அமைப்பாளர் கோபு, இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, மாவட்ட, மாநகர, தொகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
    • மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

    பார்வதீஸ் கல்லூரியில் 936, என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 840, என்.பி.ஆர். கலைக்கல்லூரியில் 696, அனுகிரகா பள்ளியில் 168, பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 348 பேர் என மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து அதனை தங்கள் தேர்வு எழுதும் மையத்துக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    அனுமதி இல்லாத பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு வரக்கூடாது எனவும், தேர்வு நடப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே வளாகத்திற்குள் வந்து விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர்.
    • 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.

    கோவை

    கோவையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் கடந்த கல்வி ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கவும், 3 பேருக்கு பி.டி.எஸ். ( பல் மருத்துவம்) படிக்கவும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.

    நடப்பாண்டு கலந்தாய்வு முடியும்போது தான், அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
    • திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு.

     திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தற்போது இந்த ஓமியோபதி கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாகி விட்டது.

    இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 10 தினங்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.

    ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவப் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும்.

    அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.

    அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையாளரின் அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகளை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர்வது குறித்து உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
    • அனைத்து மாணவ- மாணவிகளும் முக கவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.மாணவிகளுடன் அவர்களது பெற்றோர் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    கோவை :

    நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் சவுரிபாளையம் கேந்திரிய வித்யாலயா, அன்னூர் நவபாரத் நேஷனல் பள்ளி, சூலூர் ஆர்.வி.எஸ். கலைக்கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர், குரும்ப பாளையம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கண்ணம் பாளையம் கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 229 மாணவர்கள் உள்பட மொத்தம் 5,400 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முழுக்கை ஆடைகள் அணியக்கூடாது, கலாசார, பாரம்பரிய உடை அணிந்தால், சோதனை செய்ய ஏதுவாக இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். செருப்புகள் குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் அனுமதிக்க ப்படும். ஷூக்கள் அணிய அனுமதியில்லை.

    ஆடைகள் தொடர்பான தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவிர அனைத்து வகை ஆபரணங்கள், கைக்கடிகாரம், காப்பு, புகைப்பட கருவி, பெல்ட், தொப்பி, மொபைல் போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோ போன் போன்றவற்றை தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கட்டுப்பாடுகள் காரணமாக மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு முன் கூட்டியே வந்து சேர்ந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் பலத்த சோதனைக்கு பிறகு மையத்துக்குள் அனுமதித்தனர். தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள தால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து மாணவ- மாணவிகளும் முக கவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.மாணவிகளுடன் அவர்களது பெற்றோர் ஏராளமா னோர் வந்திருந்தனர்.

    அவர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்து இருந்தனர். காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    • நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.
    • திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

    திருப்பூர் :

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இத்தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) ஆண்டுதோறும் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

    கூடுதல் தகவல்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருப்பின் திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் 73734 48484 மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.திருப்பூர் நகரப்புற நீட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வருமான நாகமணி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீட் தேர்வினை ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு, பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு என்.டி.ஏ., வழங்கியுள்ளது. இந்த முறை ஈரோடு மாவட்ட மையங்களையும் ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம்.

    திருப்பூரில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி சூரி என்ஜினீயரிங் கல்லூரி விஜயமங்கலம், கோபி கலை அறிவியல் கல்லூரி கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் மையம் அமைய உள்ளது.என்.டி.ஏ., அறிவுறுத்தலின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம்.
    • ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்த கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை 17ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் நிலையில் திருப்பூரில் விண்ணப்பித்த 474 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூரின் 13 ஒன்றியம் வாரியாக அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இதற்கான சிறப்பு பயிற்சி தொடங்கியது. ஜூலை 15 வரை நடக்கும் இப்பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    பிளஸ் 2 முடிவு வெளியான நிலையில் நீட் தேர்விற்கு, 20 நாட்களே உள்ளன. மிக குறுகிய காலத்தில் மாணவர்களை தயார்ப்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில்ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகின்றன.

    காலை 9:30 மணி முதல் மாலை 4:30மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். அதிக மதிப்பெண் பெற இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டம், முந்தைய நீட் தேர்வு வினாத்தாட்களை ஒப்பிட்டு தமிழ், ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    ஐகோர்ட்டு தடைவிதித்ததால் தமிழகத்தில் வரும் 16-ந்தேதி நடைபெற இருந்த எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. #Highcourt

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைப்பெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ- மாணவிகள் அழைக்கப்பட்டனர்.

    அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின.

    இதனை தொடர்ந்து 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வருகின்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. அவற்றை அரசு கலந்தாய்வின் மூலம் கடந்த ஆண்டு முதல் நிரப்பி வருகிறது.

    நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். கட்டணம் வருடத்திற்கு ரூ.12.5 லட்சமும், பி.டி.எஸ்.க்கு ரூ.6 லட்சமும் அரசு நிர்ணயித்துள்ளது.

    இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் குளறுப்படி குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை அளித்த தீர்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், கலந்தாய்விற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து 16-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதிய தரவரிசை பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் கலந்தாய்வு நடைமுறைகள் எதையும் பின்பற்றக் கூடாது. அதனால் சி.பி.எஸ்.இ. அடுத்து என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்துதான் எதையும் கூற முடியும். தற்போதைய நிலவரப்படி நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். #Highcourt

    ஐ.ஐ.டி. மற்றும் நீட் தேர்வு பயிற்சிக்காக 10-ம் வகுப்பு முடித்ததும் மேற்படிப்புக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா சென்று படிக்க தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.#NeetExam #JEEAdvance

    சென்னை:

    ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்க வேண்டும், எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பது பல தமிழக மாணவர்களின் கனவாக உள்ளது.

    இதற்கு போதிய பாடத் திட்டங்களும், பயிற்சியும் அவசியம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்த வரை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மொத்தம் 6 பாடங்கள் வைக்கப்படுகின்றன. முதல் மொழிப் பாடம், 2-ம் மொழிப்பாடம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் என 6 பாடங்களை தமிழக மாணவர்கள் படித்தாக வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்தாலும் 6 பாடங்கள்தான்.

    ஆனால் ஆந்திரா-தெலுங்கானாவில் பிளஸ்-2 வகுப்புக்கு 5 பாடங்கள் மட்டுமே. ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே அவர்கள் படிக்கின்றனர். மேலும் பெரும்பாலான பள்ளிகளில் ஐ.ஐ.டி. சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளன.

    வகுப்பில் பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

    எனவே ஐ.ஐ.டி. கனவில் இருக்கும் மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆந்திரா- தெலுங்கானாவில் பொது அறிவை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பொது நுழைவுத் தேர்வு ஒன்றையே மையமாக வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதால் தமிழக மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் கலாசாரம் சில ஆண்டுகளாக பெருகி வருகிறது.

    பெரும்பாலான தமிழக மாணவர்கள் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக பெற்றோரும் ஆந்திரா- தெலுங்கானா சென்று குடியேறுகிறார்கள்.

    அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட என்ஜினீயரிங் தர வரிசைப் பட்டியலில் 8-வது இடம் பிடித்த என்.ஏ.நிஷா, 9-வது இடம் பிடித்த எஸ்.நிதிஷ்குமார், 10-வது இடம் பிடித்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் ஆந்திராவில் பிளஸ்-2 வரை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாணவர் நிதிஷ்குமார் ஐதராபாத் நாராயணா ஜுனியர் கல்லூரியில் 9-ம் வகுப்பில் இருந்து படித்து வருகிறார். 4 ஆண்டுகள் அங்கு படித்து முடித்த நிலையில் மும்பை ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

    அவரது தாய் உஷா கூறுகையில், “நான் மகன் படிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி இருக்கிறேன். எனது கணவர் செல்வராஜ் இங்கு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். எனது மகனை ஐ.ஐ.டி.யில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான பயிற்சி இங்கு அளிப்பதால் சேர்த்தோம்” என்றார்.

    ஆந்திராவில் படித்த மற்றொரு மாணவரான மணிகண்டன் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பதியில் நாராயணா குரூப் பள்ளியில் படித்தார்.

    இதே போல் மாணவி நிஷா திருவள்ளூர் மாவட்டம் கொடி வளசல் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவின் புத்தூரில் படித்தவர்.

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் 2-வது இடம் பிடித்த மாணவர் ராஜ்செந்தூர் அபிஷேக் விஜயவாடாவில் படித்தவர்.

    மாணவர்கள் கூறும் போது, ஆந்திராவில் நுழைவுத் தேர்வை மையமாக வைத்து பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது ஐ.ஐ.டி. மருத்துவம், என்ஜினீயரிங் போன்றவற்றில் சேர வசதியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

    இதுபற்றி தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடங்களின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க வேண்டும், இல்லையெனில் ஆந்திராவில் படித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர். #NeetExam #JEEAdvance

    நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #NEETexam #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் சுமார் 25,000 மாணவா்கள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவா்களுக்கு 196 மதிப்பெண்கள் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்படுமானால் தமிழ் மொழியில் படித்த அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவ கல்லூாியில் சேருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறைவு.

    எனவே தமிழக அரசு, மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பிரதமரை சந்தித்து இந்த தவறான கேள்விகளுக்கான முழுமதிப்பெண்கள் தமிழகத்து மாணவா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #NEETexam #TTVDinakaran 
    ×