என் மலர்
நீங்கள் தேடியது "நீட் விலக்கு மசோதா"
- நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது
- குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மார்ச் 3ம் தேதி நிராகரித்தார்.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், "இளநிலை நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 254 கீழ் மசோதாவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் பா.ஜ.க.விடம் நிபந்தனை விதிக்கவில்லை?
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு மட்டும் வந்திருந்தால் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும்.
சென்னை:
ஊட்டி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதாவை நிராகரித்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நேற்று முன்தினம் நான் சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்? நேற்று முன்தினம் அவர் தி.மு.க. மீது குற்றம் சொல்லி அறிக்கை விடுகிறார்.
நான் கேட்கிறேன் தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டில் நீட் வந்ததா? இருந்ததா? இல்லை. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த வரை நீட் கிடையாது. ஜெயலலிதா இருந்த வரை நீட்டை தமிழ்நாட்டில் அனுமதிக்க வில்லை. அவர் மறைவுக்கு பிறகுதான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கிகளாக இருந்து இதை அனுமதித்தார்கள். இதுதான் உண்மை.
நான் இப்போது கேட்கிறேன், கூட்டணியில் இருந்த போதும், இப்போது கூட்டணி மூலம் தேர்தலை சந்திக்க முயலும் போதும் நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் பா.ஜ.க.விடம் நிபந்தனை விதிக்கவில்லை?
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூலமாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தேர்தலில் உறுதிமொழி தந்தார். அதை சொல்ல வைத்தோம்.
இப்போது கேட்கிறாரே எடப்பாடி பழனிசாமி? நீட் ரகசியத்தை சொல்லுங்கள் என்கிறாரே? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு மட்டும் வந்திருந்தால் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் மேடையில் இருந்து சவால் விடுகிறேன்.
தமிழ்நாட்டு மாணவர்கள் மீது துளியாவது அக்கறை இருந்தால் பா.ஜ.க. கூட்ட ணிக்கு போவதற்கு முன்னாடி நீட் விலக்கு தந்தால் தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா?
இவ்வாறு அவர் பேசினார்.
- நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அமைச்சகங்களின் கருத்து கேட்பு முடிந்தது.
- தமிழக அரசின் கருத்துக்கள், விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகம் நிறைவேற்றி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், தமிழக ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும், நீட் விலக்கு சட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 02.05.2022 அன்று வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறைபடி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கருத்து கேட்பு துவக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் தங்களின் கருத்துக்களை அளித்து விட்டதாகவும், அவற்றை தமிழக அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 அன்று பகிர்ந்து கொண்டு கருத்துக்களை விளக்கங்களை கேட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும் என்றும், ஒப்புதலுக்கு காலவரையறை நிர்ணயிக்க இயலாது என்றும் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது.






