search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET Exemption"

    • எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகர தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி அறிவுறுத்தலின் படி ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர், நகர துணை செயலாளர் ஆ.சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பு.பாஸ்கர், நகர பொருளாளர் த.இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் சந்தை கோடியூர் பகுதியில் நீட் தேர்வு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வ.வடிவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வி.வி.கிரிராஜ், சி.எஸ்.செந்தில்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் காளியப்பன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் பிற அணிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலருமான கே.சம்பத் ராஜா வரவேற் றார்.

    மாவட்ட தி.மு.க. செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. இளை ஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் எம்.ஆசிக் அமீன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிற்படுத் தப்பட்டோர் நலன் மற்றும் கதர் வாரியத்துறை அமைச் சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பி.மெய்யநாதன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    மாநில திட்ட குழு துணைத்தலைவர் ஜெ.ஜெய–ரஞ்சன் கருத்துரை வழங்கி னார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். விளை யாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், ராம நாதபுரம் 31-வது வார்டு கவுன்சிலருமான எம்.முஹம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் எஸ்.ரமேஷ் கண்ணா, சி.கே.குமரகுரு, சன் சம்பத்குமார், ஆர்.எஸ்.சத்தியேந்திரன், ஆர்.கே. கோபிநாத், எஸ்.தௌபீக் ரஹ்மான், மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜி.ஸ்டாலின், என்.பொன் மணி, சங்கர், எம்.வசந்த்,

    ஆர்.சண்முகப்பிரியா,ப.சம்பத்குமார், மருத்துவர் அணி துணை அமைப்பா ளர்கள் தி.சந்திரமோகன் வா.எபினேசர், செல்வராஜ், எம்.எம்.கார்த்திக், பா.சர வணபாலன், வே.சேகர், சி.கணேசன், த.கார்த்திகே யன், ந.மதிவாணன் வ.மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
    • மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது.

    சேலம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வேலையின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் சொன்னார். ஆனால் மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது. நெல்லையில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. இது போன்ற கொலைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பா.ஜ.க பிரசார அலுவலகம் போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது.

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கை கொண்டுவர வேண்டும். அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறி சொகுசு பயணமாக சென்று கொண்டிருக்கிறார். அதனால் எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×