நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்

எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி நடந்ததுஏராளமானோர் கலந்து கொண்டனர்
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை நகர தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி அறிவுறுத்தலின் படி ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர், நகர துணை செயலாளர் ஆ.சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பு.பாஸ்கர், நகர பொருளாளர் த.இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சந்தை கோடியூர் பகுதியில் நீட் தேர்வு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வ.வடிவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வி.வி.கிரிராஜ், சி.எஸ்.செந்தில்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் காளியப்பன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் பிற அணிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com