search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "venkatesan mp"

    • மேலூர் தாலுகா மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெங்கடேசன் எம்.பி. பங்கேற்றார்.
    • 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.

    மேலூர்

    மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூர், சாத்தமங்கலம், தனியாமங்கலம் சருகு வலையப்பட்டி, வடக்கு வலையபட்டி, வெள்ளலூர் உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உட்பட பல்வேறு கிராம மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    அப்போது பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என மக்களிடம் எம்.பி., உறுதியளித்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், வேளாண்மை அலு வலர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வடக்கு வலைய பட்டி, வெள்ளலூர் கிரா மங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய், மரக் கன்றுகள், மருந்து அடிக்கும் ஸ்பிரே ஆகியவற்றை எம்.பி. வழங்கினார். 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் கீழையூர் பேருந்து நிறுத்தம், தனியாமங்கலம் ரேஷன் கடை ஆகியவற்றையும் வெங்கடேசன் பார்வையிட்டார்.

    • அக்னிபாத் வீரர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? என வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.
    • அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

    மதுரை

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன். நாடாளுமன்றத்தில் 'முன்னாள் ராணுவத்தினருக்கு எத்தனை சதவீதம் மறு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? அரசு பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் எத்தனை சதவீதம் உள்ளனர்?" என்று கேள்வி எழுப்பினேன்.

    அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

    மத்திய அஞ்சல் சேவை, ஆயுதப் படையில் குரூப் "சி''- 10 சதவீதம், குரூப் டி-20 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் வரை நேரடி நியமனங்களில் 10 சதவீதம், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளில் குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம் என்ற அளவில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    இதன் அடிப்படையில் 2014-ம் ஆண்டு - 2322 பேர், 2015-ல் 10,982 பேர், 2016-ல் 9086 பேர், 2017-ல் 5638 பேர், 2018-ல் 4175 பேர், 2019-ல் 2968 பேர், 2020-ல் 2584 பேர், 2021-ல் 2983 பேர் என்று முன்னாள் ராணுவத்தினர் பணி நியமனம் பெற்று உள்ளனர்.

    குறிப்பாக 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் கிடைத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையோடு, 2017 - 2021 ஆகிய 5 ஆண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு தென்படுகிறது. கடந்த 2015-களில் 10 ஆயிரத்தை தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள், 2019- 2021க்கு இடைப்பட்ட 3 ஆண்டுகளில் தலா 3 ஆயிரத்தை கூட தாண்டவில்லை.

    அரசு நிர்ணயித்த இடஒதுக்கீடு எவ்வளவு சதவீதம் நிரப்பப்பட்டு உள்ளது? என்று பார்த்தால், அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.

    மத்திய சிவில் சேவைகள்-அஞ்சல் துறையில் குரூப் சி-1.39 சதவீதம், குரூப் டி-2.77 சதவீதம், மத்திய பொது நிறுவனங்களில் குரூப் சி-1.14 சதவீதம், குரூப் டி- 0.37 சதவீதம், பொதுத் துறை வங்கிகளில் குரூப் சி - 9.10 சதவீதம், குரூப் டி-21.34 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் குரூப் "ஏ"-2.20 சதவீதம், குரூப் "பி"-0.87 சதவீதம், குரூப் "சி"-0.47 சதவீதம், குரூப் "டி"-0.00 சதவீதம் என்று உள்ளது.

    அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் முன்னாள் ராணுவத்தினரின் அதிகபட்ச சதவீதம் 3 கூட தாண்டவில்லை. ஜீரோ சதவீதமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள முன்னாள் ராணுவத்தினர் நிலை இப்படித்தான் உள்ளது. மறு வேலை வாய்ப்பு இல்லை.

    ராணுவப் பணியின் கடைசி ஊதியம், புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது இல்லை. 20 ஆண்டு ராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ்கால கதியே இது என்றால் 4 ஆண்டு ஒப்பந்த அக்னிபாத் வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அமைச்சகங்களின் கருத்து கேட்பு முடிந்தது.
    • தமிழக அரசின் கருத்துக்கள், விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகம் நிறைவேற்றி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

    அதில், தமிழக ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும், நீட் விலக்கு சட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 02.05.2022 அன்று வந்ததாக கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறைபடி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கருத்து கேட்பு துவக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் தங்களின் கருத்துக்களை அளித்து விட்டதாகவும், அவற்றை தமிழக அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 அன்று பகிர்ந்து கொண்டு கருத்துக்களை விளக்கங்களை கேட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது போன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும் என்றும், ஒப்புதலுக்கு காலவரையறை நிர்ணயிக்க இயலாது என்றும் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது. 

    ×