search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai MP"

    • கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
    • மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பனிர் வாசுகி, டி.கே.ரங்கராஜன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்எல்ஏக்கள் நாகை மாலி சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

    இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனை மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    • 17653 கச்சேகுடா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.
    • 17655 காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி சர்கார் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.

    சென்னை - விழுப்புரம் ரெயில் வழித்தடம் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த தகவலை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "காலையிலிருந்து ரயில் பயணிகள் மற்றும் பயணிகளின் உறவினர்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு புறம் பயணிகளிடனும் இன்னொரு புறம் தெற்கு இரயில்வேயின் தலைமையகத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். யாரும் பதட்டமடைய வேண்டாம். ரயில்வே நிர்வாகம் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து நிலமையை திறம்பட கையாண்டு வருகின்றனர். என்பதை பயணிகளுக்கு தெரிவித்தபடி உள்ளேன்.

    ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த நிலைமையை கீழே பதிவிட்டுள்ளேன்.

    கீழே உள்ள இரயில்கள் தவிர தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பிற ரயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளன. விரைவில் அவைகள் அனைத்தும் நிறைவிடத்துக்கு வந்து சேரும்.

    சென்னை விழுப்புரம் இடையே உள்ள முக்கிய வழித்தடம் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனர். எனவே இன்று இரவு சென்னையிலிருந்து புறப்படும் இரயில்கள் அனேகமாக ரத்தாக வாய்ப்பில்லை. தேவைப்பட்டால் புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்பதை தெரிவித்துள்ளனர்.

    நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு வண்டி இப்பொழுது வாலாஜா ரோடு கடந்துள்ளது. காலை உணவு திருக்கோயிலூர் மக்கள் தந்தனர். காட்பாடியில் அவரவர் வாங்கிக் கொண்டனர் என்று இரயில் பயணிகள் தெரிவித்தனர்.

    ஒரு புறம் நிலமையை திறம்பட கையாளப் பெருக்கெடுத்தோடும் நீருக்கு நடுவே நின்று தண்டவாளங்களை சரி செய்து கொண்டிருக்கும் இரயில்வே ஊழியர்கள். மற்றும் விழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் இரயில்வே அலுவலர்கள். மறுபுறம், எங்கெங்கோ சென்றபடி நகரும் ரயிலுக்குள் நிலமையை சமாளித்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகள். இரு முனைகளின் குரல்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

    பெரும் புயலும், பேரிடரும் சந்தித்து மீளும் வலிமையே மனிதத்தின் தனித்துவம்.

    ——

    இரயில்வே நிர்வாக தகவல்கள்;

    சென்னை பிரிவு;

    17653 கச்சேகுடா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.

    17655 காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி சர்கார் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.

    560 உணவுப் பொட்டலங்களும் 700 தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன சிக்கித் தவிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    திருச்சி பிரிவு;

    போக்குவரத்து ஏற்பாடுகள்: மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 2700க்கும் மேற்பட்ட பயணிகளை சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல மொத்தம் 27 பிரத்யேக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. •

    உணவு மற்றும் நீர் விநியோகம்: பாதிக்கப்பட்ட ரயில்களில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் இடையூறு ஏற்படும் போது அவர்களின் வசதி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. (3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன) • பாதுகாப்பான போக்குவரத்து: பேருந்துகள் பயணிகளை பாதுகாப்பாக சென்னையில் அவர்கள் சேருமிடத்திற்கு ஏற்றிச் சென்றன.

    இவைகள் தவிர

    1. மாம்பழப்பட்டில் (MMP) - 16 பேருந்துகள், 1500 பயணிகள் 2. வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 5 பேருந்துகள், 600 பயணிகள் 3. விழுப்புரம் ஜன. (VM) - 5 பேருந்துகள், 600 பயணிகள் உணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன: 1. மாம்பழப்பட்டில் (MMP) - 450 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 2. வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 450 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 3. விழுப்புரம் ஜன. (VM) - 2000 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 4. திருவண்ணாமலையில் (TNM) - 100 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டுள்ளன.

    கீழே உள்ள ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன

    1. பண்ருட்டி நிலையத்தில் ரயில் எண். 20606 (TCN-MS).

    2. ரயில் எண். 17408 (MQ-TPTY) திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில்

    3. ரயில் எண். 12694 (TN-MS), ரயில் எண். 22662 (RMM-MS), 16752 (RMM-MS) விழுப்புரம் ஜே.என்.

    4. வெங்கடேசபுரத்தில் ரயில் எண். 20636 (QLN-MS)

    5. மாம்பழப்பட்டில் ரயில் எண். 12662 (SCT-MS), 12638 (MDU-MS) 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
    • மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.

     'மதுரை தொகுதி MP-யை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் பல்வறு தொகுதிகளிளும் எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் கரூர் தொகுதிகளிலும் இதே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    இந்நிலையில் நேற்று மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் பக்கத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • "வராக்கடன்கள் வேறு, கடன் தள்ளுபடி வேறு" என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
    • "ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது?" என சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்

    இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடிகளை கடனாக பெற்ற பல தொழிலதிபர்கள் அவற்றை முறையாக திருப்பி செலுத்தாததன் விளைவாக வங்கிகள் அவற்றை வாராக்கடனாக தங்கள் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு இவற்றால் வங்கிகளின் நிகர லாபங்கள் குறைவதும் தொடர் கதையானது.

    சில வருடங்களுக்கு முன் இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வராக்கடன்கள் என்பது வேறு; கடன் தள்ளுபடி என்பது வேறு - வராக்கடன்கள் மீண்டும் வங்கிகளுக்கு கிடைக்க போகும் பணம்தான்" என பதிலளித்திருந்தார்.

    மேலும், சில தினங்களுக்கு முன் அவர், "மத்தியில் 2004 தொடங்கி 2014 வரை ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி நடந்த போது கடன் பெற தகுதியற்ற பலருக்கு பொதுத்துறை வங்கிகள் கடன்கள் வழங்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டன. இவற்றை மீட்டெடுக்க மத்திய ரிசர்வ் வங்கி, நான், பிரதமர், வங்கி அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டோம். அதன்படி எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அமலாக்க துறை ரூ.15,186.64 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பண மோசடி தடுப்பு சட்டம் மூலம் மீட்டு அவை அந்தந்த பொதுத்துறை வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர், சு. வெங்கடேசன் (53), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள வராக்கடன்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் சு. வெங்கடேசன் பதிவிட்டிருப்பதாவது:

    வராக்கடன் என்றால் வசூலாகும் கடன்தான் என்று எப்போதும் நிதியமைச்சர் விளக்கம் தருவார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது? பதில் சொல்லுங்கள்

    வராக்கடனா ? வஜாக்கடனா?

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ×