search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian FM"

    • "வராக்கடன்கள் வேறு, கடன் தள்ளுபடி வேறு" என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
    • "ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது?" என சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்

    இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடிகளை கடனாக பெற்ற பல தொழிலதிபர்கள் அவற்றை முறையாக திருப்பி செலுத்தாததன் விளைவாக வங்கிகள் அவற்றை வாராக்கடனாக தங்கள் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு இவற்றால் வங்கிகளின் நிகர லாபங்கள் குறைவதும் தொடர் கதையானது.

    சில வருடங்களுக்கு முன் இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வராக்கடன்கள் என்பது வேறு; கடன் தள்ளுபடி என்பது வேறு - வராக்கடன்கள் மீண்டும் வங்கிகளுக்கு கிடைக்க போகும் பணம்தான்" என பதிலளித்திருந்தார்.

    மேலும், சில தினங்களுக்கு முன் அவர், "மத்தியில் 2004 தொடங்கி 2014 வரை ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி நடந்த போது கடன் பெற தகுதியற்ற பலருக்கு பொதுத்துறை வங்கிகள் கடன்கள் வழங்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டன. இவற்றை மீட்டெடுக்க மத்திய ரிசர்வ் வங்கி, நான், பிரதமர், வங்கி அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டோம். அதன்படி எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அமலாக்க துறை ரூ.15,186.64 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பண மோசடி தடுப்பு சட்டம் மூலம் மீட்டு அவை அந்தந்த பொதுத்துறை வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர், சு. வெங்கடேசன் (53), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள வராக்கடன்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் சு. வெங்கடேசன் பதிவிட்டிருப்பதாவது:

    வராக்கடன் என்றால் வசூலாகும் கடன்தான் என்று எப்போதும் நிதியமைச்சர் விளக்கம் தருவார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது? பதில் சொல்லுங்கள்

    வராக்கடனா ? வஜாக்கடனா?

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் கடன் சுமை குறைவு
    • வர்த்தக நிறுவனங்களின் முடிவெடுக்கும் திறனை பயங்கரவாதம் பாதிக்கிறது

    நாட்டின் பொருளாதார சிந்தனையை வகுக்க உதவும் அமைப்பான "நிதி ஆயோக்", இந்திய நிதித்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவுடில்யா பொருளாதார சந்திப்பு (Kautilya Economic Conclave) எனும் பொருளாதார நிபுணர்களின் சந்திப்பு கூட்டம் இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றது.

    இதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் மொத்த கடன் தொகையை குறைக்க வழி தேடுகிறோம். கடனை குறைக்க, வளர்ந்து வரும் நாடுகள் கடைபிடிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். நமது நாட்டு கடன் தொகையை குறைத்தாக வேண்டியது கட்டாயம். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கடன் அதிகம் அல்ல. ஆனாலும் எதிர்கால சந்ததியினர் இதன் தாக்கத்தை அனுபவிக்காத வகையில் பொறுப்புணர்ச்சியுடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். இந்த திசையில் தற்போது அரசாங்கத்தின் முயற்சிகள் சீராக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் இதை குறைத்து விடுவோம் என நம்புகிறேன். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு, உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் செயல்திறனும் பயன்பாடும் குறைந்து வருகிறது. போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சச்சரவு மற்றும் பயங்கரவாதம், நிறுவனங்கள் நீண்ட கால வர்த்தக முடிவுகளை எடுப்பதை தடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாத இறுதி வரை உள்ள தரவுகளின்படி, மத்திய அரசாங்கத்தின் கடன் ரூ.155.6 டிரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கடனும், அதை அடைப்பதற்கான அதிக செலவினங்களும், 'கிரெடிட் ரேட்டிங்' எனப்படும் வாங்கும் கடனை திருப்பி அடைக்கும் திறனுக்கான தர வரிசை பட்டியலில் இந்தியாவை முன்னேற முடியாமல் தடுக்கிறது.

    ×