என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து நடக்கும்உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
- திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர்:
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். வருகிற 20-ந் தேதி திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மருத்துவர் அணி அமைப்பாளர் கோபு, இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, மாவட்ட, மாநகர, தொகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்