search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Subramanian"

    • அரசு சார்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
    • விஷகடிகளுக்கான மருந்துகள் அனைத்தும் சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என பேசினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு, ஹைவேவிஸ் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது, தேனி மாவட்டம் கூடலூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கட்டிடம், பெரியகுளத்தில் ரூ.45லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிலமலை பகுதியில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    அழகர்சாமிபுரம், மேலசிந்தலைச்சேரி பகுதியில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் 2 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் தேனி மாவட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளுக்கு அரசாணை பெறப்பட்டு மிகவிரைவில் பணிகள் தொடங்க உள்ளது. அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க மற்றும் உடற்கூறு ஆய்வு மையம் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    ஓடைப்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், தேவாரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது. காமயகவு ண்டன்ப ட்டி மற்றும் கோம்பை பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் இந்திய மருத்துவ முறை புறநோயாளிகள் பிரிவு ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ளது.

    பாம்புகடி மற்றும் நாய்கடிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவை யான மருந்து கையிருப்பில் உள்ளது.

    இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் மாரடைப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்க 3 வகையான 14 மாத்திரைகள் 8713 துணைசுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    மக்களை தேடி மருத்துவம் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் உள்ளது. இதில் எம்.ஆர்.பி மூலம் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரமே பணியாணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அந்த மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சுமூக முடிவு எடுக்கப்பட்டு விரைந்து மருத்துவ பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
    • திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு.

     திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தற்போது இந்த ஓமியோபதி கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாகி விட்டது.

    இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 10 தினங்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.

    ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவப் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும்.

    அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.

    அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையாளரின் அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகளை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர்வது குறித்து உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×