search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babri Masjid"

    • பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மதச்சார்பின்மை, அரசியலையமைப்பு சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றை காத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ‌. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து தமிழக முழுவதும் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ‌.

    இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அப்துல் காதர் தொகுப்புரை வழங்கினார்.

    தஞ்சை சட்டமன்றத் தொகுதி தலைவர் முகமது ரபீக் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ரியாஸ் அகமது தொடக்க உரையாற்றினார். மாநில பேச்சாளர் பிலாலுதீன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திட வேண்டும், மதச்சார்பின்மை, அரசியலையமைப்பு சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றை காத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட பொருளாளர் சர்புதீன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பேச்சாளர் தஸ்லிமா ஷெரிப், தஞ்சை சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் முகமது தாகிர், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி பொதுச் செயலாளர் பனசை அரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் இருந்து திருச்சி வரை ரெயில் நிலையங்களில் 4,300 போலீசார் குவிப்பு.
    • நாளை வரை முக்கிய ரெயில் நிலையங்களுக்கான பாதுகாப்பு தொடரும்.

    பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று முதல் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் தலைமையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இணைந்து சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய்ப்படை உதவியுடன் போலீசார் சோதனை செய்கின்றனர். இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    சென்னையில் இருந்து திருச்சி வரை உள்ள ரெயில் நிலையங்களில் 1,300 ரெயில்வே போலீசார், 3,000 ரெயில்வே பாதுகாப்பு போலீசார் என 4 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். கடந்த 3-ந்தேதி தொடங்கிய இந்த பாதுகாப்பு பணியானது நாளை (புதன்கிழமை) வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. #AyodhyaCase #SC
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் நிலத்தை பிரித்துக்கொள்ள நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது.



    பின்னர் இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இவ்வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்டே, சந்திரஷூட் ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றிருந்தனர்.
     
    ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதம் ஆனது.

    அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பியதையடுத்து, அயோத்தி வழக்கு பிப்ரவரி 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று காலை விசாரணை தொடங்கியது. #AyodhyaCase #SC
    இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #BabriMasjid #Demolitionday
    சென்னை:

    இன்று (டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.



    சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சாலையில் நீண்டநேரமாக அனாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால், அதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #BabriMasjid #Demolitionday

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. #Ayodhya #Section144 #BabriMasjid
    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  #Ayodhya #Section144 #BabriMasjid 
    நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #BabriMasjid #BabriMasjidDemolitionDay
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட சிவசேனா மற்றும் விசுவ இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதற்காக சமீபத்தில் அயோத்தியில் தர்மசபை கூட்டம் நடத்தப்பட்டது.

    அதில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் அயோத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

    இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய துணை நிலை படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    அயோத்தியில் மட்டுமின்றி பைசலாபாத் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    அயோத்தியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  #BabriMasjid #BabriMasjidDemolitionDay
    பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Babrimasjid
    திருச்சி:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக மக்கள் வரிப்பணம் ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்கி மோடி அரசு வீணடித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது. இந்த சிலைக்கான முதலீட்டை கொண்டு ஏராளமான விவசாய மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். அத்துடன் 2 புதிய ஐ.ஐ.டி.க்கள், 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 5 புதிய ஐ.ஐ.எம். வளாகங்களை அமைத்திருக்க முடியும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட இருப்பதால் இத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதா? என்பதை கள ஆய்வு செய்து முடிவு செய்ய பொதுச்செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பது.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்ட வேண்டும், அங்கு சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அப்புறப்படுத்த வேண்டும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #Babrimasjid
    ×