என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத கலவரம்"

    • மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, துப்ரி மாவட்டத்தில் சமீபத்திய மதரீதியான பதற்றங்களை தொடர்ந்து, இரவில், கண்டதும் சுடும் (shoot-at-sight) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    அசாம் - வங்கதேச எல்லையை ஒட்டிய துப்ரியில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு, ஹனுமான் கோவில் அருகே மாட்டுத் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மற்றும் கல் வீச்சு போன்ற மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிஸ்வா, "இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், மாலை 6 மணிக்குப்பிறகு கண்டதும் சுடப்படுவார்கள்.

    சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க விரைவு அதிரடிப் படை (RAF) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நிலைநிறுத்தப்படுகின்றன.

    குற்றவாளிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்படும். மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்" என்று தெரிவித்தார்.

    பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
    • மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றன.

     மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையில், மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

    விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே பேசுகையில், "ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவுவை முன்னெடுப்பகள் மூலம் நிறைவேற்ற உள்ளோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கைகள், உருவ பொம்மை எரிப்பு, பொதுக் கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலம் செல்வோம்" என்று தெரிவித்தார்.

     

    மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவுரங்கசீப் பற்றி புகழ்ந்ததை அடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அம்மாநில அரசியலில் ஒளரங்கசீப் பிரச்சனை பெரும்பிரச்னையாக மாறியது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், சட்டப்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் "நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று பேசினார்.

    இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் பேசுகையில், "மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் இவ்வாறு கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

     

    முன்னதாக 1992 இல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019 இல் ரூ.1800 கோடி செலவில்  ராமர் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.

    முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பா.ஜனதா பிரமுகர், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அவர் போது, மத கலவரத்தை தூண்டும் வகையிலும், மேலும் மாவட்ட நிர்வாகத்தை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜனதா பிரமுகர் கருப்பு முருகானந்தம் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×