search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaint register"

    சாயர்புரத்தில் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    சாயர்புரம்:

    சாயர்புரம் புது நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாதேஷ் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (24). அங்கு நடை பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவில் பேனர் வைக்கப்பட்டது. அதில் நவீன்குமார் படம் இடம் பெறவில்லை. 

    இதுகுறித்து ஆனந்த ராமன், மாதேஷ், பொன் மாணிக்கம் ஆகியோரிடம் எனது படம் ஏன் பேனரில் சேர்க்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே 3 பேரையும் நவீன்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    காயம் அடைந்த 3 பேரும் சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளங்குறிச்சியை சேர்ந்தவர் தின்ஷா பேகம் (வயது 33). இவர் கடந்த  2006-ம் ஆண்டு அரியமங்கலம் மேலஅம்பிகாபுரத்தை சேர்ந்த பிலால் உசேன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

    அப்போது அவரின் பெற்றோர் 35 பவுன் நகை, ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதற்கிடையே தற்போது மேலும் வரதட்சணையாக பணம் வேண்டும் என கேட்டு பிலால்உசேன் மனைவியிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அவர் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பிலால்உசேன், அவரது தாய் சாய்புனிசா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    நன்னிலம் அருகே திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சின்னகரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 19). இவர் கல்லூரியில் படிக்கும்போது, கும்பகோணம் மேல விசலூரை சேர்ந்த தமிழரசன் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மகேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழரசனை வற்புறுத்தி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழரசன் மகேஸ்வரியை சந்திப்பதை தவிர்தது வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதனை தமிழரசன் ஏற்கவில்லை.

    அவர் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றி விட்டதை அறிந்த மகேஸ்வரி இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழரசனை தேடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கெடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமதாஸ் (வயது 25),எலக்ட்ரீசியன், இவர் மலைமேடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி அருகே பெண் ஏட்டுவுடன் போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நடந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது, மிரட்டி பாலியலில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #womanpolicemolestation
    திருச்சி

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 51). இவர் கடந்த 10-ந்தேதி இரவுப்பணியில் இருந்த போது அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் 32 வயதுள்ள பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தகவல் வந்தது. இந்த சம்பவம் நடந்த போது நேரில் பார்த்த உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் இதனை நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் ஏட்டும் போலீசில் புகார் செய்தார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக், எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பி ரமணியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். சம்பவம் நடந்தபோது இருவரும் பணியில் இருந்ததால் துறை ரீதிகயாவும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில் எஸ்.எஸ்.ஐ. காவல் நிலையத்திற்கு வந்தததும் பெண் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுபோல் பதிவாகியிருந்தது.

    ஆனால் பெண் ஏட்டு தன் இருக்கையை விட்டு எழும்பாமல் அமர்ந்தபடியே இருந்திருந்தார். இதனால் அவரின் சம்மதத்துடனேயே இது நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். புகார் அளித்த பெண் ஏட்டு மருத்துவ விடுப்பு பெற்றுக் கொண்டு விடுமுறையில் சென்று விட்டார்.

    டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் ஏட்டுவின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறிய தகவல்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்கப்பட்டது.
    பெண் ஏட்டு அளித்த தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. பாலசுப் பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல் என்ற 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் தன் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? அவரின் சம்மதத்துடன் தான் முத்தம் கொடுத்தேன் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் எதிராக புகார் ஏதும் செய்யாததால் பெண் போலீசின் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #womanpolicemolestation
    16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி திருமலைநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு திருமண ஆசைகாட்டி, கடந்த 30-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் 8ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் கோட்டார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் நாகராஜன் (வயது 30) அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் நாகராஜன் தலைமறைவாகி உள்ளார்.

    கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை மகளிர் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து மகளிர் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    காட்பாடி 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் சமூக பணியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா, விருதம்பட்டு போலீசில் புகார் மனு அளித்தார்.

    அதில், ‘‘எங்களது குழந்தைகள் இல்லத்தில் வாலாஜா தாலுகா ஒழுகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். வழக்கத்தைவிட அதிகமாக கோபம் கொண்டார்.

    இதையடுத்து மாணவியை அருகேயுள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையின்போது, மாணவி கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாளில் காங்கேயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அருகேயுள்ள வீட்டிற்கு வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த சேகர் (62) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    அதன்காரணமாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேகர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழிபாதை விவகாரத்தில் திருச்சி வணிக வளாக காவலாளி மீது தாக்குதல் நடத்திய பெண்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் தனியார் அடுக்கு மாடி வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் பின்புறம் பொது மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வணிக வளாகத்தின் வழியாக தான் அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்ல வேண்டும். இதற்கிடையே வணிக வளாகத்தினர் தங்கள் இடத்தின் வழியாக யாரும் செல்லக்கூடாது என கூறியுள்ளனர். இது தொடர்பாக குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் , வணிக வளாக உரிமையாளருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    சம்பவத்தன்று வணிக வளாகத்தினர் அப்பகுதியில் இரும்பு கேட் அமைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள்,  வணிக வளாகத்திற்கு நள்ளிரவில் திரண்டு சென்றனர். திடீரென அங்கு பணியில் இருந்த காவலாளி மண்ணச்சநல்லூர் கூத்தூர் அருகே பண்ணமங்கலத்தை சேர்ந்த கந்தசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது காவலாளி வணிக வளாகத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள், காவலாளியின்  செல்போனை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவில் கரூர் பைபாஸ் ரோடு அண்ணாமலை நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்த நிலையில் வணிக வளாகத்தின் காவலாளி கந்தசாமி , தன்னை குடியிருப்பு வாசிகள் ராணி, மாலா ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதாக உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இது குறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் , 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய கணவர் மீது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    குளச்சல்:

    குளச்சல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    மாணவிக்கு கடந்த சில நாட்களாக திடீர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள்,  மாணவி, கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இது பற்றி மாணவியின் உறவினர்கள் அவரிடம் கேட்டபோது, தந்தை தான் தன்னை கற்பழித்ததாக கூறினார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தாயார் வீட்டில் இல்லாத போது தந்தை தன்னை கற்பழித்து விட்டதாகவும், இதை வெளியே சொன்னால் தாயாரை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், குளச்சல் அனைத்து  மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன். கீதா, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் மாணவியின் தந்தை மைக்கேல் என்ற மிக்கேல் (வயது 44) என்பவர் மீது இந்திய தண்டனை சட்டம் 506 (1) மற்றும் போக்சோ சட்ட பிரிவில் வழக்குபதிவு செய்தனர்.

    புகார் கூறப்பட்ட மைக்கேல் தற்போது வெளியூரில்  வேலை பார்த்து வருகிறார். தகவல் அறிந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து மகளிர் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    அரியலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 161 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான பேர் இறந்துள்ளனர். இதில் தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன சட்ட பிரிவு 129–ன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தி உள்ளது. 

    இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது சட்ட பிரிவு 129–ன் கீழ் 161 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வெண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது பிரிவு 129 மோட்டார் வாகன சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வியாபாரியிடம் ரூ. 2 கோடி மோசடி செய்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியில், விளைபொருட்களை பதப்படுத்தி வைக்கும் குளிரூட்டப்பட்ட குடோன்  உள்ளது. இதனை கோர்வை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ரெங்கராஜ் (வயது 36) என்பவர் மதுரையைச் சேர்ந்த பாரதி (41) என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

    இங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுண்டல் உள்ளிட்ட பல தானியங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் நாட்டில் இருந்து கண்டெய்னர்களில் வரவழைக்கப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரத்து 50 கிலோ கருப்பு சுண்டல், 80 ஆயிரத்து 130 கிலோ வெள்ளை சுண்டல் போன்றவை குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசில் ரெங்கராஜ் புகார் மனு அளித்துள்ளார். அதில், பங்குதாரர் பாரதி, அவரது நண்பர்கள் விருதுநகரைச் சேர்ந்த பிரேம்குமார், மரிய பாஸ்கர், கற்பகராஜ், புதுக்கோட்டை தமிழரசன், முதுகுளத்தூர் ஜெயச்சந்திரன், சென்னை கொடித்தோப்பு குணசேகர் ஆகியோர் சென்னை அக்ரோ நிறுவனம் பெயரில் குடோனில் இருந்த ரூ.2 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரத்து 400 மதிப்பிலான சுண்டலை கொள்முதல் செய்தனர்.

    இதற்காக ரூ.17 லட்சம் முன் பணம் கொடுத்த அவர்கள், மீதிப்பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர். 

    பலமுறை கேட்டும் 2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டனர் என குறிப்பிட் டுள்ளார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×