என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண ஆசைக்காட்டி இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் மீது போலீசில் புகார்
Byமாலை மலர்27 Jan 2019 11:26 AM GMT (Updated: 27 Jan 2019 11:26 AM GMT)
நன்னிலம் அருகே திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சின்னகரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 19). இவர் கல்லூரியில் படிக்கும்போது, கும்பகோணம் மேல விசலூரை சேர்ந்த தமிழரசன் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழரசனை வற்புறுத்தி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழரசன் மகேஸ்வரியை சந்திப்பதை தவிர்தது வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதனை தமிழரசன் ஏற்கவில்லை.
அவர் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றி விட்டதை அறிந்த மகேஸ்வரி இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழரசனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X