search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணிடம் வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
    X

    பெண்ணிடம் வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

    மணப்பாறை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளங்குறிச்சியை சேர்ந்தவர் தின்ஷா பேகம் (வயது 33). இவர் கடந்த  2006-ம் ஆண்டு அரியமங்கலம் மேலஅம்பிகாபுரத்தை சேர்ந்த பிலால் உசேன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

    அப்போது அவரின் பெற்றோர் 35 பவுன் நகை, ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதற்கிடையே தற்போது மேலும் வரதட்சணையாக பணம் வேண்டும் என கேட்டு பிலால்உசேன் மனைவியிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அவர் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பிலால்உசேன், அவரது தாய் சாய்புனிசா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    Next Story
    ×