search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aurangzeb"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவுரங்கசீப்பை முகலாய பேரரசராக இந்திய முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை என்றார்.
    • மகாராஷ்டிர துணை முதல் மந்திரி பட்னாவிசின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா நகரில் பா.ஜ.க. சார்பில் பொது பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், நம்முடைய அரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜா மட்டுமே. நமக்கு மற்றொரு அரசர் கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழி வந்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

    இந்த நாட்டில் உள்ள, தேசிய கருத்துகளை கொண்டுள்ள ஒரு முஸ்லிம் ஒருபோதும் அவுரங்கசீப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை மட்டுமே மதிப்பார் என தெரிவித்தார். துணை முதல் மந்திரியின் இந்தக் கூற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரதமர் மோடி அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார். #PMModi #Aurangzeb #SanjayNirupam
    வாரணாசி:

    அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தபோது, தன்னை எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என வேதனையுடன் பட்டியலிட்டார்.

    இதற்கு மத்தியில் பிரதமர் மோடியை அவரது வாரணாசி தொகுதியிலேயே நேற்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம், அவரை அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் என குறிப்பிட்டார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த தொகுதி மக்கள் அவுரங்கசீப்பின் நவீன அவதாரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். வாரணாசியில் பெரும் சாலைகள் அமைப்பதற்காக மோடியின் அறிவுறுத்தலால் நூற்றுக்கணக்கான கோவில்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன” என கூறினார்.

    “விஸ்வநாதரை தரிசிக்க கோவிலுக்கு வருகிறவர்களிடம் மோடி அறிவுறுத்தலின்பேரில் ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவுரங்கசீப்பால் செய்ய முடியாததை மோடி செய்கிறார் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது” எனவும் அவர் கிண்டல் செய்தார்.  #PMModi #Aurangzeb #SanjayNirupam 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த வீரர் அவுரங்கசீப். இவர் ரம்ஜான் விடுமுறை அன்று தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவரை துப்பாக்கி முனையில் கடத்திய பயங்கரவாதிகள், பின் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், ராணுவ வீரரின் குடும்பத்தினருடைய பொறுமையும், தைரியமும் பிரமிக்க வைப்பதாகவும், மறைந்த ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பின் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்துக்கு ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவரை என்கவுண்டரில் வீழ்த்திய ராணுவ குழுவில் அவுரங்கசீப்பும் ஒருவர்.

    இந்நிலையில், அவுரங்கசீப் ரம்ஜான் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து, அவுரங்கசீப்பை கடத்தியது ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், புல்வாமாவுக்கு இன்று சென்ற ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட அவுரங்கசீப்பின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.. #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு சென்ற போது பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted

    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர். 

    விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அவரை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அவுரங்சீப் பங்குபெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடத்தி சென்றவர்கள் விசாரித்துள்ளனர். 



    1.15 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அவுரங்கசீப்பை கடத்தி சென்றவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு சென்ற போது பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted

    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை இன்று பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். 

    ராணுவ வீரர் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
    ×