என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிக்கொடி"

    • ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி நடத்தினர்.
    • பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமியைக் கொண்டாடும் போது, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர், காவி கொடிகளை ஏந்தியவாறு மசூதியின் மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.

    ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி சென்ற இந்துத்துவாவினர் அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்காவில் கபளீகரம் செய்துள்ளனர்.

    சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், இந்துத்துவாவினர், சையத் சலார் காஜி தர்காவில் ஏறி காவி கொடிகளை அசைப்பதும், பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.

    முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று மகாராஷ்டிராவின் ரஹுரி மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் நுழைந்து மேலே ஏறி பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றிய காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது.
    • டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

    ஒரு கும்பல் மசூதியை இடிக்க முயற்சிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது. கஜாபூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மசூதி சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், மசூதியை ஒரு கும்பல் இசைக்கும் அந்த வீடியோவை ஐதராபாத் எம்.பி ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மகாராஷ்டிரா மாநில அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    ஒவைசி பகிர்ந்த வீடியோவில், "மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு கும்பல் மசூதியின் மேல் ஏறி, காவிக்கொடியை நட்டு, மசூதியை இடிக்க முயன்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×