search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NRC"

    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    • தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.
    • தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்வில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் அவரது மருமகனுமான அபிஷேக் பானர்ஜியும் அவருடன் ஈத் விழாவில் கலந்துகொண்டார்.

    ரம்ஜான் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    குடியுரிமை (திருத்தம்) சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாரும் எங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

    தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.

    இந்தியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். ஆனால் வங்காளத்தில், தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அசாம் மாநிலத்தைப் போல், எல்லா மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #HomeMinistry #NRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த மாநிலத்தின் உண்மையான குடிமக்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் இறுதி வரைவு பதிவேடு, சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.



    அதில், அம்மாநிலத்தைச் சேர்ந்த 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருக்கிறது. உண்மையான நபர்களின் பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், பெயர் நீக்கம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, இந்த கணக்கெடுப்பு தொடங்கிய 2015-ம் ஆண்டில் இருந்து, அசாம் மாநிலத்தில் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், பூர்வகுடிக்கான ஆதாரம் இல்லாத ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவர்கள் கட்டுமான பணிக்கு ஆட்கள் தேவைப்படும் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் சென்று இருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

    இதை கருத்தில் கொண்டு, அசாமைப் போல், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்துவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

    இதுபற்றி அந்த அமைச்சக உயர் வட்டாரங்கள் கூறுகையில், “இத்தகைய கணக்கெடுப்பு நடத்துவதில் சிரமம் இருக்காது. இருப்பினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தன.  #HomeMinistry #NRC
    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர் தெரிவித்தார். #OmMathur #BJP
    ஜெய்ப்பூர்:

    பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த விஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #OmMathur #BJP #tamilnews 
    அசாம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #RajnathSingh #NRC
    புதுடெல்லி :

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். இந்த, விவகாரம் குறித்து இந்திய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

    ‘சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அசாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் மீது எந்த அரசியலும் இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். அசாம் மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இதை, வரைவு பட்டியல் அறிமுகம் செய்ததன் மூலம் அசாம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேவையில்லாத பதற்றமும், பயமும் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இது தொடர்பாக கவலைப்பட ஒன்றுமில்லை.

    தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் இறுதியானது அல்ல. எனவே, வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’ என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh  #NRC
    அசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பாக வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வசிப்போர் பற்றிய தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் அசாமை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் இவர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடி புகுந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜெலா நேற்று முன்தினம் இறுதி வரைவு பதிவேட்டின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதன் மீது நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.



    அப்போது நீதிபதிகள் கூறுகையில், “வரைவு இறுதி பதிவேடு தொடர்பாக மத்திய அரசு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கி அதை கோர்ட்டின் ஒப்புதலுக்காக வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும். மேலும், விடுபட்டு உள்ளவர்களின் பெயர்களை சேர்க்க மற்றும் இது தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்க உள்ளூர் பதிவாளர் ஒருவர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்படவேண்டும். இந்த பதிவேடு தொடர்பாக கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் இது வெறும் ஒரு வரைவு பதிவேடுதான்” என்று உத்தரவிட்டனர்.  #AssamNRC #SupremeCourt
    ×