search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contemplating"

    சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். #JitendraSingh #CBI
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், அப்போதைய சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் வெடித்தது. இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

    எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக சி.பி.ஐ. அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் பரிசீலிப்பதாக தகவல் வெளியானது.

    ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.  #JitendraSingh #CBI 
    அசாம் மாநிலத்தைப் போல், எல்லா மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #HomeMinistry #NRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த மாநிலத்தின் உண்மையான குடிமக்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் இறுதி வரைவு பதிவேடு, சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.



    அதில், அம்மாநிலத்தைச் சேர்ந்த 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருக்கிறது. உண்மையான நபர்களின் பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், பெயர் நீக்கம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, இந்த கணக்கெடுப்பு தொடங்கிய 2015-ம் ஆண்டில் இருந்து, அசாம் மாநிலத்தில் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், பூர்வகுடிக்கான ஆதாரம் இல்லாத ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவர்கள் கட்டுமான பணிக்கு ஆட்கள் தேவைப்படும் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் சென்று இருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

    இதை கருத்தில் கொண்டு, அசாமைப் போல், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்துவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

    இதுபற்றி அந்த அமைச்சக உயர் வட்டாரங்கள் கூறுகையில், “இத்தகைய கணக்கெடுப்பு நடத்துவதில் சிரமம் இருக்காது. இருப்பினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தன.  #HomeMinistry #NRC
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. #MSDhoni #Retirement
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2-வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.



    லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

    தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. 37 வயதான டோனி 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 
    ×