என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அமைச்சர் உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை
- பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.
- ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாடு முழுக்க தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வாக்குப் பதிவு நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.
பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டர் நீட்டுக்கல் என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது ஹெலிகாப்டரில் பணம், பரிசு பொருள் என எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்