search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: தமிழக-கேரள எல்லை பகுதிகளில் பறக்கும் படை தீவிர சோதனை
    X

    பாராளுமன்ற தேர்தல்: தமிழக-கேரள எல்லை பகுதிகளில் பறக்கும் படை தீவிர சோதனை

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
    • கேரளாவில் சில நாட்களில் கேரளாவில் வாக்குப்பதிவு.

    நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 13 ஆம் தேதி நாட்டின் 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழக - கேரள எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு கேரளா மாநில எல்லைகளில் சோதனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×