என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பனை-தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க கோரி தேங்காய்களை கையில் ஏந்தி விவசாயிகள் போராட்டம்
    X

    பனை-தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க கோரி தேங்காய்களை கையில் ஏந்தி விவசாயிகள் போராட்டம்

    • பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்,

    தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×