என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீஸ் நடவடிக்கையால் காயம் அடைந்த விவசாயியிடம் ராகுல் காந்தி போனில் பேச்சு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    போலீஸ் நடவடிக்கையால் காயம் அடைந்த விவசாயியிடம் ராகுல் காந்தி போனில் பேச்சு

    • போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தவறானது.
    • நாட்டின் முக்கியமானவற்றுக்காக நீங்கள் போராடுகிறீர்கள்.

    போலீஸ் நடவடிக்கையால் காயம் அடைந்த விவசாயியும், முன்னாள் ராணுவ வீரரான குர்மீத்சிங் குடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொலைபேசியில் பேசினார். செல்போன் மூலம் இந்த உரையாடல் நடந்தது.

    காயம் அடைந்த விவசாயியிடம் எங்கே காயங்கள் ஏற்பட்டது என்று ராகுல் காந்தி கேட்டார். விவசாயி தனது கைகளிலும், கண்ணுக்கு அருகிலும் காயம் ஏற்பட்டதாக பதில் அளித்தார். போலீஸ் நடவடிக்கையால் எத்தனை போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர் என்றும் ராகுல் கேட்டார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:-

    போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தவறானது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கவலை படாதீர்கள். நாட்டின் முக்கியமானவற்றுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். நாட்டின் உணவு வழங்குவோர் மீது மோடி அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது.

    இவ்வாறு அந்த விவசாயியிடம் ராகுல் காந்தி பேசினார்.

    Next Story
    ×