search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாடு கோரிய தண்ணீரை திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு
    X

    தமிழ்நாடு கோரிய தண்ணீரை திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • பிப்ரவரி, மார்ச்சில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரை தடையின்றி திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீரையும் தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×