search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education minister"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்
    • இவ்வருட தேசிய கல்வி தின கருப்பொருள் "புதுமையை ஏற்றல்"

    சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், மவுலான அபுல் கலாம் ஆசாத். 1947 ஆகஸ்ட் 15லிருந்து 1958 பிப்ரவரி 2 வரை அவர் இப்பதவியை வகித்தார்.

    அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக அவர் பிறந்த தினமான நவம்பர் 11, ஆண்டுதோறும் தேசிய கல்வி தினம் (National Education Day) என இந்திய அரசால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, கல்வியாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர் அபுல் கலாம் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்தியாவின் பெருமைமிகு மகனான அபுல் கலாம் ஆசாத், கல்விக்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவரது ஆற்றலை நினைவுகூரும் வகையிலும், அவரது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் "தேசிய கல்வி நாள்" என கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது" என 2008 நவம்பர் 11 அன்று தேசிய மனிதவள துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், உரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அவர்களின் ஆற்றலை வளர்க்கும் வகையில் கதை, கட்டுரை, விவாதம், பேச்சு உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறும்.

    புதுமையான திட்டங்களையும், வழிமுறைகளையும் சிந்திக்கவும், செயல்படுத்தவும், இந்தியர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, 2023க்கான தேசிய கல்வி தின கருப்பொருளாக (theme) "புதுமையை ஏற்றல்" (Embracing Innovation) முன்னிறுத்தப்பட்டுள்ளது.

    1888 நவம்பர் 11 அன்று சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பிறந்த ஆசாத், 1958 பிப்ரவரி 22 அன்று இந்திய தலைநகர் டெல்லியில் காலமானார்.

    1992ல் அவருக்கு இந்திய அரசாங்கம் "பாரத ரத்னா" (Bharat Ratna) எனும் இந்தியாவின் உயரிய விருதை  (இறப்புக்கு பின்) வழங்கி கவுரவித்தது.

    இந்தியாவில் கல்வியறிவு 75 சதவீதம் உள்ளதாகவும், அதிகபட்சமாக கேரளாவில் 93 சதவீதமும், குறைந்த அளவாக பீகாரில் 61 சதவீதம் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.
    • காய்ச்சல் பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆலோசனைக்கு பின் முடிவு.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுத்த விவகாரத்தில் இதுவரை 2பேர் கைது செய்யப்பட்டு, 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

    பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும்.

    காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தனியார் பள்ளிகள் 11 ஆம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை.
    • போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக் கொள்வார்கள்.

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியுள்ளதாவது:

    11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. பொதுவாக தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக 12-ம் வகுப்பு பாடத்தை நடத்துகின்றன. அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்து, தங்கள் பள்ளிதான் சிறந்தது என்பதை காட்ட வேண்டும் என்று அவர்கள் சென்று விடுகிறார்கள்.

    11-ம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டால், போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக் கொள்வார்கள். அதனை கருத்தில்கொண்டுதான் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #Sengottaiyan #PublicExams
    சென்னை:

    ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. 

    அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என தெரிவித்தார். ஆனாலும், பொதுத்தேர்வு பற்றிய குழப்பம் நீடித்தது.



    இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. பொதுத்தேர்வு உள்ளது என தவறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாநில அரசு விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

    எனவே, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது. மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். #Sengottaiyan #PublicExams
    கேரளாவில் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் சாதனை படைத்த 96 வயது மூதாட்டிக்கு மாநில கல்வித்துறை சார்பில் லேப்டாப் பரிசு வழங்கப்பட்டது. #KarthiyaniAmma #Aksharalaksham
    ஆலப்புழா:

    கேரள மாநிலத்தில் இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்‌ஷரலக்‌ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல்,  கணிதம் ஆகியவற்றின்  அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வில் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த 96 வயது மூதாட்டியான கார்த்தியாயினி அம்மா, 100-க்கு 98 மார்க் எடுத்து  சாதனை படைத்துள்ளார். இதற்குப் பிறகு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியை முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.



    இந்நிலையில், எழுத்தறிவு இயக்கத்தில் முதலிடம் பிடித்த கார்த்தியாயினி அம்மாவின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கு மாநில கல்வித்துறை சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசை கல்வி அமைச்சர் நேற்று வழங்கினார். லேப்டாப்பை ஆன் செய்து காட்டிய அமைச்சர், அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.  #KarthiyaniAmma #Aksharalaksham
    அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட, தாங்கள் விரும்பும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Minister #Sengottaiyan
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கி, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவரும் இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்து, தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திட வாருங்கள் என்று இருகரம்கூப்பி அழைக்கின்றேன்.

    “கல்லாதவர்களே இல்லாத மாநிலமாய் தமிழகத்தை ஆக்க வேண்டும் - பள்ளி வகுப்பறைகள் புனிதமாக இருக்க வேண்டும்” என்பதை தாரக மந்திரமாக கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க. அரசு, பள்ளி கல்வித்துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடியை ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து வருகிறது.

    எவ்வளவுதான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், என் பள்ளி இது என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஏந்திய உங்களைப் போன்ற நல்லோரின் துணையும், அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும்.

    பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாக மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×