என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி மந்திரி"

    • ஜார்க்கண்ட் கல்வி மந்திரியாக பதவி வகித்து வந்த ராம்தாஸ் சோரன் காலமானார்.
    • அவரது மறைவை ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    டேராடூன்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்சிலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்தாஸ் சோரன். மாநில பள்ளி கல்வி மந்திரியாக பதவி வகித்து வந்த ராம்தாஸ் சோரன், சமீபத்தில் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராம்தாஸ் சோரன் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவை ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக, ஹேமந்த் சோரன் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இதுபோன்று எங்களை விட்டு விட்டு நீங்கள் இப்படி சென்றிருக்கக் கூடாது என பதிவிட்டுள்ளார். ராம்தாஸ் சோரனின் மகன் சோமேஷ் சோரனும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

    • ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர்.

    திருவனந்தபுரம்:

    2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. புதிதாக பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

    புத்தாண்டு வாழ்த்துக்களை பெரும்பாலானோர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது சமீபகால வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் தற்போதே தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள், அம்மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை தாங்களே தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு களவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். மாணவ-மாணவிகளின் அந்த படைப்புகள் கைவி னைப் பொருட்கள், ஓவியங்கள் என பல விதங்களில் இருந்தன.

    மாணவ-மாணவிகள் தங்களின் படைப்புகளை தபால் சேவை மூலம் கல்வித்துறை மந்திரியின் அலுவலகத்திற்கு அனுப்பி அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    ×