search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்
    X

    5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #Sengottaiyan #PublicExams
    சென்னை:

    ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. 

    அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என தெரிவித்தார். ஆனாலும், பொதுத்தேர்வு பற்றிய குழப்பம் நீடித்தது.



    இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. பொதுத்தேர்வு உள்ளது என தவறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாநில அரசு விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

    எனவே, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது. மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். #Sengottaiyan #PublicExams
    Next Story
    ×