என் மலர்
நீங்கள் தேடியது "p. chidambaram"
- அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
- இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது.
1984 இல் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையிலான பிரிவினைவாதிகள் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக்கோரி அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்தபடி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.
இந்த பிரிவினைவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவதற்காக இந்திரா காந்தி அரசு ஜூன் 1 முதல் ஜூன் 6, 1984 வரை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் பெயர் தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
இந்த நடவடிக்கையில் பொற்கோவிலுக்குள் புகுந்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொற்கோவிலிலும் சேதங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்திய நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக, அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான நடவடிக்கை என்றும் அந்த தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் நடந்த பஞ்சாப் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜா எழுதிய இந்திரா காந்தி படுகொலை பற்றிய புத்தகம் குறித்த விவாதத்தில் சிதம்பரம் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "எந்த ராணுவ அதிகாரியையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை, ஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.
ப்ளூ ஸ்டார் ஒரு தவறான அணுகுமுறை, மேலும் அந்த தவறுக்கு இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது இராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிவில் அமைப்பிகளின் கூட்டு முடிவு. இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது" என்று கூறினார்.
மேலும் கலந்துரையாடலின் போது, பஞ்சாபில் காலிஸ்தான் மற்றும் பிரிவினைவாதம் பற்றிய அரசியல் முழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அங்கு தற்போது உள்ள உண்மையான பிரச்சனை பொருளாதார நிலைமை என்றும் பஞ்சாப் சென்றபோது தான் இதை உணர்ந்ததாகவும் சிதம்பரம் கூறினார்.
- ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன
அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், " வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் S.Y.குரேஷி, O.P.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்ததுள்ளனர்.
குடிமகனோ, தேர்தலில் பங்களிப்பாளராக இருப்பவரோ குற்றச்சாட்டு முன்வைக்கும்போது அதை விசாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலையே தவிர, எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
மதிக்கத்தக்க இந்த மூன்று பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.
- GST சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
- கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் வேண்டுகோள்கள் உங்கள் காதுகளுக்கு கேட்கவே இல்லை.
இப்போது ஜி.எஸ்.டி. வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசை தூண்டியது எது?
மந்தமான பொருளாதார வளர்ச்சியா? வீட்டுக் கடன் அதிகரிப்பா? வீட்டு சேமிப்பு குறைவதா? பீகாரின் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா?
- புலம்பெயர்ந்த தொழிலாளி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
- சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 6.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க போகிறார்கள் என்று வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையிலும் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக "சேர்ப்பது" பற்றி வெளிவந்துள்ள செய்திகள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தலையீட்டை ஏற்படுத்தும்.
வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி ஏன் பீகார் (அல்லது அவர்களது சொந்த மாநிலத்தில்) மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீகாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய வீடு உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்" என்று எப்படி கருதப்பட முடியும்?
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம்.
- போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம். பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.
16 மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
இந்நிலையில், "பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த ப. சிதம்பரம், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு NIA எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட பாஜக அரசாங்கம் விரும்பவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டார்களா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதாவது, நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை
ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட இழப்புகளை மறைக்கிறார்கள். ஒரு போரில், இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்படுவது இயல்பு தான். இந்தியா இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்
பிரதமர் ஏன் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசவில்லை? நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்
போர் நிறுத்தம் எப்படி வந்தது என்பது குறித்து கேட்கப்படும் கேள்விகள் பாஜக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? ஏனென்றால், நேர்மையாகச் சொல்லப் போனால், போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்" என்று தெரிவித்தார்.
ப. சிதம்பரத்தின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த ஒப்பேடு குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்கள் பேசியிருக்கிறார்:
'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளில் (2004-2014) தமிழ்நாட்டுக்கு அளித்த நிதியை விட மூன்று மடங்கு நிதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதினோறு ஆண்டுகளில் (2014-2025) தந்திருக்கிறது' என்று பெருமைபட்டிருக்கிறார்
இது அசாதரணமும் அல்ல, அதிசயமும் அல்ல!
2013-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவு (பட்ஜெட்) தொகை
ரூ 15, 90, 434 கோடி
2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவுத் தொகை
ரூ 47, 16, 487 கோடி
வரவு-செலவுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விடக் கூடுவது நடைமுறை; வளர்ந்து வரும் நாடுகளில் அது இயல்பாக நடப்பது
10 ஆண்டுகளில் வரவு-செலவு மொத்தத் தொகை மூன்று மடங்கு கூடும் போது ஒவ்வொரு இனத்திற்கும் திட்டத்திற்கும் செலவு கூடுவதும் நடைமுறை; அது இயல்பாக நடப்பது
10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும்? பிரதமர் மோடியின் 10-11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குப் பகிர்ந்தளித்த நிதியை விட மூன்று மடங்கு -- அல்லது அதற்கும் அதிகமான மடங்கு -- நிதி அளிக்கப்படும் என்பதும் அதிசயமாகாது; இயல்பாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- அதிக நிதி கொடுத்தாகவும் இருப்பினும் இங்கு சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
- பொருளாதார அளவுகோல்' என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.
இன்று ரமேஷாரத்தில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தபின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்துக்கு முந்திய ஆட்சிகளை விட அதிக நிதி கொடுத்தாகவும் இருப்பினும் இங்கு சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2004-14 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட 2014-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதியை வழங்கியதாக பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
உதாரணமாக, தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு தனது அரசு முன்பை விட ஏழு மடங்கு அதிகமாக நிதியை வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். 'பொருளாதார அளவுகோல்' என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.
முதல் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவரைக் கேட்டால் கூட இதைச் சொல்வார். GDP, ஒன்றிய பட்ஜெட், அரசின் செலவினம் என அனைத்தும் ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டில் அதிகமாகத்தான் இருக்கும்.
எண்கள் என்ற அடிப்படையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. ஒட்டுமொத்த GDP, செலவினத்தின் விகிதாச்சார அடிப்படையில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதா? என்பதே முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
- இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியைப் போல் அடாவடியாகப் பேசியது இல்லை
- பிரதமர் தனது முன்னோடிகள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்க வேண்டும்
இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியைப் போல் அடாவடியாகப் பேசியது இல்லைராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-
இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...
தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.
முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.
அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?
இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.
மோடியின் இந்த பேச்சிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,
"இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியைப் போல் அடாவடியாகப் பேசியது இல்லை. அவரின் ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மன்மோகன் சிங்கின் பேச்சைத் திரித்து மோடி பேசுவது விஷமத்தனமானது
பொதுமக்களின் நிலம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் எப்போது, எங்கு கூறியது?
தனிநபர்களின் சொத்துக்கள், பெண்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி ஆகியவற்றை எப்போது, எங்கு மதிப்பிடுவது என்று கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியது?
தனிநபரின் சொத்துகளையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் என காங்கிரஸ் எப்போது கூறியது ? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் என காங்கிரஸ் எப்போது பேசியது?
பிரதமர் தனது முன்னோடிகள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் டிசம்பர் 2006 இல் ஆற்றிய உரையை இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் மறுபதிப்பு செய்துள்ளது. இந்தியாவின் வளங்கள் மீதான முதல் உரிமை இங்குள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தான் உள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா?
- மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி படத்தை (1982) எடுக்கும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை" என்ற பிரதமரின் கருத்து எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு (இறப்பு 1955) 'காந்தி' படம் வெளிவந்த பிறகுதான் (1982) மகாத்மா காந்தியைப் பற்றி தெரியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.
- காங்கிரஸ் சிவகங்கை தொகுதியில் வெற்றி வாகை சூடியது.
- ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது.
சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நீண்ட காலம் வென்ற கட்சி காங்கி ரஸ். பல முறை வென்று எம்.பி.யாக இருந்தவர் ப.சிதம்பரம். அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி கூட்டணியில் இந்த தொகுதியை காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்து வந்துள்ளது.
திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி மற்றும் சிவகங்கை என 6 சட்டசபை தொகுதிகளை கொண்ட இத்தொகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் என்பதால், அதே பின்புலத்தை கொண்ட ப.சிதம்பரத்தை மக்கள் 7 முறை மக்களவைக்கு அனுப்பியுள்ளனர்.
திருப்புவனம், புஷ்பவனம், குன்றக்குடி குடைவரை கோவில், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில், இடைக்காட்டூர் இருதய மாதா கோவில் உள்ளிட்டட் பல கோவில்கள் நிறைந்த சிவகங்கை , ஆன்மீக பூமியாகவும், மருது பாண்டியர்கள், வேலுநாச்சியார் ஆட்சி செய்த வீரத்தின் விளைநிலமாகவும் உள்ளது.
சிவகங்கையில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், பாசனத்திற்கு தேவையான நீர் இல்லை என்பதும், இங்கு புதிய தொழில்களை துவங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், காரைக்குடி, திருப்பத்தூர் வழியாக திண்டுக்கல்லுக்கும், தொண்டி, சிவகங்கை வழியாக மதுரைக்கும் புதிய ரெயில் வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும், காரைக்குடி செட்டிநாடு விமான நிலை யம் அமைப்பது, சிவகங்கை கிராபைட் உபதொழிற்சா லைகள் ஏற்படுத்துவது, சிங்கம்புணரியில் கயிறு வாரியம் அமைப்பது போன்ற கோரிக்கைகள் இம்மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளன.
காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த தொகுதியில் கோட்டை அமைத்திருக்கிறது என்று கூறவே இயலாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோட்டையாகவே தான் இது இருக்கிறது. இத்தொகுதி பிரிக்கப்பட்டு முதல் இரண்டு முறை நடைபெற்ற (1967-71, 1971-77) தேர்தல் களில் தி.மு.க.வை சேர்ந்த தா.கிருஷ்ணன் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
77-80 காலகட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெரிய சாமி தியாகராஜன் என்ப வரை உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தனர். அதன் பின்பு காங்கிரஸ் அங்கு கோலூன்ற துவங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் அதன் பின்பு தேர்வு செய் யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்று மாறி மாறி ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது என்றாலும் மிகையாகாது.
காங்கிரசில் இருந்து ப.சிதம்பரம் பிரிந்திருந்த சம யத்தில் காங்கிரஸ் வேட்பா ளர் சுதர்சன நாச்சியப்பனை சிவகங்கையில் நிற்கவைத்து வெற்றி வாகை சூட வைத்தது காங்கிரஸ். பின்பு காங்கிர சில் மீண்டும் இணைந்தார் ப.சிதம்பரம். 2014 தேர்தலில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வேட்பாளாராக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். தி.மு.க. சார்பில் சுப.துரைராஜூம், அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதனும், பா.ஜ.க. சார்பில் எச்.ராஜாவும் நிறுத்தப்பட்டனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2014 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் 2-வது இடத்தில் தி.மு.க.வு.ம், மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க. 3-வது இடத்தையும் பிடித்தன. சொந்த செல்வாக்கு இருந்தபோதிலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 4-வது இடமே கிடைத்தது. ஆனால் கடந்த 2019 தேர்தலில் மீண்டும் ப.சிதம்பரத்தின் "கை" ஓங்கியது.
இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார். அவருக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தன.
அதே போல கடந்த முறை தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி இம்முறை தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் நிலவிய கோஷ்டி பூசல்கள், கார்த்தி சிதம்பரத்தின் சர்ச்சை பேச்சுகள் போன்றவை சிவகங்கை தொகுதியில் இம்முறை காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.
ஆனால் அனைத்து யூகங்களையும் தகர்த்து ப.சிதம்பரத்தின் கை ஓங்கியதன் மூலம் இம்முறையும் காங்கிரஸ் இத்தொகுதியில் வெற்றி வாகை சூடியது. இதைத்தொடர்ந்து இம்முறையும் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று சிவகங்கை காங்கிரசின் கோட்டை என்பதை நிரூபணம் செய்துள்ளார்.
- மைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர்.
- பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.
கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.
இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதை விமர்சித்தார்.
- இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது
மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் நாடு முழுவதும் மணிப்பூர் கலவரம் அதிர்வலையை ஏற்படுத்தியதை போல தற்போதைய மணிப்பூர் சூழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மணிப்பூர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தனது பதிவில், மணிப்பூர் சூழலுக்கு முதல்-மந்திரி பைரோன் சிங் திறமையின்மைதான் காரணம் என்றும் தற்போது 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதையும் விமர்சித்து இருந்தார்.
இதற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பைரோன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு ப.சிதம்பரத்தின் முந்தைய செயல்பாடுகளே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தார். அப்போது மணிப்பூரில் இபோபிசிங் முதல்வராக இருந்தார். அப்போது ப.சிதம்பரம் மியான்மரை சேர்ந்த வெளிநாட்டவரான தங்கலியன் பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தார். அந்த நபர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜோமி மறு ஒருங்கிணைப்பு ஆர்மி என்ற இயக்கத்தின் தலைவர் ஆவார்.
தற்போது மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுவதற்கு அடிப்படை காரணமே சட்ட விரோதமாக மியான்மரில் இருந்து குடியேற்றங்கள் நடந்ததுதான். இதற்கு காரணமாக இருந்தது ப.சிதம்பரம்தான். அவர் தடை செய்யப்பட்ட அந்த இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது என்று மணிப்பூர் முதல்வர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியான ஒக்ராம் இபோபி சிங்கும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கார்கேவிடமும் புகார் கூறினார். இதையடுத்து கார்கேவும் தலையிட்டார். எனவே ப.சிதம்பரம் தனது பதிவை நீக்கினார்.






