என் மலர்
நீங்கள் தேடியது "Shiv Sena MP"
- மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.
- சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். செல்வாக்கு மிகுந்த இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஐதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர்.
இந்த குடும்பத்தினருக்கு பல கோடி மதிப்பிலான நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா எம்.பி.சந்தீபன்ராவ் பூம்ரேவிடம் டிரைவராக ஜாவேத் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மகாராஷ்டிராவில் சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை சலார்ஜன் குடும்பத்தினர் பரிசாக வழங்கியுள்ளனர். இதற்கான ஆவணத்தையும் டிரைவர் ஜாவேத்திடும் கொடுத்துள்ளனர்.
எம்.பி.யின் டிரைவருக்கு திடீரென செல்வாக்கு மிகுந்த குடும்பத்தினர் ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை பரிசாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், புலனாய்வாளர்கள் கேட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளேன் சலார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவு உள்ளன, எனவே அவர்கள் அந்த நிலத்தை எனக்கு பரிசாக அளித்தனர்," என்று டிரைவர் கூறினார்.
ஜாவேத் எங்கள் டிரைவர் என்றாலும், அவர் செய்யும் எல்லாவற்றின் மீதும் எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. எப்படியிருந்தாலும், ஹிபனாமா என்பது சொத்துக்களை பரிசாக வழங்குவதற்கான சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று எம்.பி.யின் மகன் கூறினார்.
வக்கீல் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் பிரவீன் பவார் தெரிவித்தார்.
- இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
- மராத்தி தான் மும்பையின் மொழி என்று MLA ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையின் மூலம் இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மராத்தி குறித்து பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
இந்த விவகாரம் குறித்து பேசிய எம்.பி. சஞ்சய் ராவத், "பாஜகவின் கொள்கை வகுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான பையாஜி ஜோஷி, மராத்தி மும்பையின் மொழி இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் கொல்கத்தாவிற்கு சென்று பெங்காலி அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா? அவர் சென்னைக்கு சென்று தமிழ் அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா?" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா இடம் பெற்றுள்ளது. இருப்பினும், பா.ஜனதாவை அடிக்கடி விமர்சித்து வருகிறது. அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. தற்போது, இந்த கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி செல்கிறார்.
அதற்கு முன்பாக, அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று அயோத்தி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆனால், அங்கு ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எவ்வளவு நாளாகும்? ஜனாதிபதி மாளிகையில் இருந்து உத்தரபிரதேச சட்டசபை வரை இதற்கான ஏற்பாடுகளை செய்ய எவ்வளவு காலம் ஆகும்? இரண்டு இடங்களிலும் பா.ஜனதா அரசுகள்தான் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் பா.ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பால்தாக்கரே உத்தரவுப்படி, அயோத்தியில் பாபர் ராஜ்யத்தை சிவசேனா தொண்டர்கள் அகற்றினர். அவர்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் பயமோ, பொறாமையோ கொள்ள வேண்டாம். பெருமைப்படுங்கள். நாங்கள் ராமர் பெயரை சொல்லி, ஓட்டுக்காக பிச்சை பாத்திரம் ஏந்தியது இல்லை. தேர்தலின்போது, வார்த்தை ஜாலத்தில் ஈடுபட்டது இல்லை. ஆனால், நாங்கள் அயோத்திக்கு செல்கிறோம் என்றவுடன், இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவது ஏன்? நாங்கள் அரசியல் நோக்கத்துடன் அங்கு செல்லவில்லை.
அது, எவருடைய தனிப்பட்ட இடமும் அல்ல. எனவே, எங்கள் மீது சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, ராமர் கோவில் கட்ட தேதியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ShivSena #RamarTemple






