search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demolished"

    • இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
    • மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில், நாடு முழுவதும் 1.53 லட்சம் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டுள்ளது என்று ஹவுசிங் அண்ட் லேண்ட் ரைட்ஸ் நெட்வொர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    23 மாநிலங்கள், 4 யூனியன் பிரேதேசங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் நாடு முழுவதும் இடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும், வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், நீதிமன்ற உத்தரவுகளால் சுமார் 3 லட்சம் பேர் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2022ல், நீதிமன்ற உத்தரவுகளின் விளைவாக 33,360 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், 2023 இல் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    2022 ஆம் ஆண்டில் 46,371 வீடுகள் இடிக்கப்பட்டு 2.3 லட்சம் பேர் வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2023 ஆம் ஆண்டில் 107, 499 வீடுகள் இடிக்கப்பட்டு 5.15 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

    குர்கான், டெல்லி, அகமதாபாத், அயோத்தி, சூரத் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெரும்பாலான ஏழைகள், தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான மக்களிடம் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கும், அவர்களின் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கும் போதுமான காரணங்களை அதிகாரிகள் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • உருளையன்பேட்டை தி.மு.க. தீர்மானம்
    • சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத ஆதிதிராவிட நலத்துறை முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி மற்றும் கிளை தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீடாராஜப்பர் வீதியில் உள்ள தென்றல் அரங்கில் நடந்தது.

    தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல் வரவேற்றார். அவை தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், மாணவர் அணி அமைப்பா ளர் மணிமாறன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தகர் அணித் தலைவர் செல்வ முத்து குமார விநாயகம் , அமைப்பு சாரா ஓட்டுநர் அணித் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.மாநில துணை அமைப்பாளர்அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளரும், தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் செய்திருந்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    உருளையன்பேட்டையில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக கட்டிக் கொடுக்க போதிய நிதியை வருகின்ற நிதி ஆண்டில் ஒதுக்கி, புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கவும் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தி மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரமான குடிநீர், தடையில்லா மின்சாரம், தரமான சாலை வசதிகளை மேம்படுத்தவும் உரிய நட வடிக்கையை மேற்கொள்ள அரசை வலியுறுத்துவது.

    ராஜா நகரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத ஆதிதிராவிட நலத்துறை முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது.

    உப்பனாறு மேம்பால கட்டுமான பணியை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அண்ணா திடலை சுற்றி அமைந்துள்ள குபேர் பஜார் மற்றும் நேரு பஜார் கடைகளை 3 ஆண்டாக கட்டி ஒப்படைக்காத அரசின் மெத்தன போக்கு மற்றும் செயலற்ற தன்மையால் வியாபாரிகளை அல்லல்பட வைத்துள்ள அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

    என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. கூட்டத்தில், தொகுதி துணை செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், புவனேஷ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    முடிவில் தொகுதி பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

    • பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.
    • பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழமையான இந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.

    சுமார் 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் இங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சுவரை இடித்து அகற்றிவிட்டு புதிய சுவர் கட்டவேண்டும் என பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். பழமையான சுவர் இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், தயக்கம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று காம்பவுண்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் பொதுநிதியில் இருந்து விரைவில் புதிய சுவர் கட்டப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

    பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • முன்னாள் மாணவர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • மாதா கோவில் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தற்சமயம் 283 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாராயணகுமார், செயலாளர் பிரபு ஆகியோர் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தற்சமயம் 283 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடம் 90 வருடங்களுக்கும் மற்றொரு கட்டிடம் 50 வருடங்களுக்கும் மேலான பழமையான கட்டிடமாகும்.

    மேலும் இப்பள்ளி தொடங்கப்பட்டு 100-ம் ஆண்டை நெருங்கி க்கொண்டி ருக்கிற வேளையில் பழமையான கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருவதால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எனவே இப்பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு மாணவர்கள் நலன் கருதி புதிய கட்டிடத்தினை கட்டித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுவரை தற்காலிகமாக சிறுவர் சீர்திருத்தபள்ளியிலோ அல்லது பாரதியார் பல்கலைக்கூ டத்திலோ மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும்.

    மாணவர்களை நோணாங்குப்பம் அரசு பள்ளிக்கு மாற்றுவதாக இருந்தால் மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசலில் பாதுகாப்பின்றி நடந்து செல்ல நேரிடும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

    • ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை கடந்த 23-ம் தேதி ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தார்
    • ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    ஆரோவில் அருகே இரும்பை கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அந்தப்பகுதி மக்களின் வாக்குச்சாவடி மையமாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் ஒன்றிய செயலாளர் ராஜ கோபால் (வயது 70). அங்கன்வாடி மைய கட்டிடம் பின்புறம் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு இடத்தை செப்பணிட்டார் வந்தார்.

    ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை கடந்த 23-ம் தேதி ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தார். அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அங்கு திரண்டு வந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

     இந்நிலையில் இரும்பை ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கபாலி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாதை அமைப்பதற்காக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்த ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
    • நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் 40 ஆண்டுகள் பழமையான பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நுழைவு வாயிலான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கல்விக்காகவும், பணிகளுக்காகவும், கோவை, திருப்பூர், நீலகிரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுமார் 40 ஆண்டு கால பழமையான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகின்றன. இதனால் தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தர விட்டது.

    இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் காரமடை, வெள்ளியங்காடு, அன்னூர், புளியம்பட்டி செல்லும் பஸ்கள் நிற்கும் நிறுத்தத்தில் இருக்கும் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.

    இதனை அறிந்த மேட்டுப்பாளையம் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் ஆரிப் உள்ளிட் டோர் கட்டிடங்களின் மேல் தளத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடங்களின் மேல் தளத்தை பயணிகளின் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. முன்னதாக இந்த கட்டிடத்தின் வழியாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் செல்லாதவாறு கயிறுகளை கட்டி நகராட்சி பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. சவாரி செயல் பட்டு வரும் கடைகளின் கோடுகள் மற்றும் கடையின் பொருள்களை ரோடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து மெர்சல் ஏற்படுவதோடு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தற்போது ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இததனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ரோட்டை அளவீடு செய்யும் போது ஒரு சில பெரிய கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கடை உரிமையாளர்களுக்கு விரைவில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கருத்தை முடித்து அகற்ற வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    • கொடுமுடி அருகே இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே சுள்ளிமடை பகுதியில் இருந்து குதிரைக்கல் மேடு பகுதி வரை கீழ்பவானி வாய்க்கால் செல்கின்றது. இந்த வாய்க்காலில் சுமார் 12 அடியில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தான் விவசாய நிலங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பாசனம் செய்து வந்தார்கள்.

    மேலும் பள்ளக்காட்டூர், வெட்டுக்காட்டூர், ராசா ம்பாளையம், பழனியாண்ட வர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலத்துக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனை தெடர்ந்து பொதுப்பணித் துறை ஊழியர்கள் பாலத்தை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அடைப்பை எடுத்து சரி செய்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர்.

    இடிக்கப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டித் தர இப்பகுதி மக்களும், விவசாயிகளும் பல முறை தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பொது மக்களும், விவசாயிகளும் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக இடிக்கப்பட்ட பாலத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வைத்து உள்ளனர்.

    மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    துலுக்கானத்தம்மன் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளூவர் நகரில் உள்ள துலுக்கானத்தமன் கோவில் அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று மதியம் உச்சிகால பூஜையை முடித்து கோவில் நடையை சாத்திவிட்டு பூசாரி அய்யனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலையில் மீண்டும் அங்கு வந்த அவர் கோவில் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே பதறியடித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று பார்த்தபோது துர்க்கையம்மன், விநாயகர், முருகர் ஆகிய சாமி சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தி இருந்தது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து அய்யனார் தெரிவித்த தகவலின் பேரில் கோவில் அறங்காவல் குழுவினர் முத்தியால்பேட்டை போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை பார்வையிட்டு கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்கள் யார்? எனவும் விசாரித்து வருகிறார்கள். பட்டப்பகலில் கோவிலுக்குள் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
    கும்பகோணம் நகரில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு அய்யப்பன் நகர் பகுதியில் ஒலைபட்டினம் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் பகுதிகளை ஒட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் நீர் நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்த ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் கும்பகோணம் நகராட்சி சார்பில் ஒலைபட்டினம் வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக காலிசெய்ய எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி சார்பில் இந்த பகுதி மக்களுக்கு கொற்கை பகுதியில் பட்டாவுடன் வீட்டு மனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொற்கை பகுதியில் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற வேண்டும் என்றும், ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதியை விட்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் முறைப்படி நோட்டீசு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் கும்பகோணம் நகராட்சி ஆணையாளர் உமாமகேஸ்வரி, ஆர்.டி.ஓ. வீராசாமி, தாசில்தார் ஜானகிராமன், மற்றும் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் மற்றும் போலீசார் நால்ரோடு ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு இருந்த மக்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு கூறினார். இதையடுத்து அங்கு வசித்தவர்கள் உடனடியாக தங்களது வீடுகளில் இருந்த டி.வி., கட்டில் மற்றும் பாத்திரங்கள் தளவாட சாமான்களை எடுத்து கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

    இதையடுத்து நகராட்சி சார்பில் ஜெ.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பாபர் மசூதி 17 நிமிடங்களில் இடிக்கப்பட்டது. ஆனால், ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எவ்வளவு நாளாகும் என்று சிவசேனா எம்.பி. கேள்வி விடுத்தார். #ShivSena #RamarTemple
    அயோத்தி:

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா இடம் பெற்றுள்ளது. இருப்பினும், பா.ஜனதாவை அடிக்கடி விமர்சித்து வருகிறது. அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. தற்போது, இந்த கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி செல்கிறார்.

    அதற்கு முன்பாக, அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று அயோத்தி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை ராம பக்தர்கள் வெறும் 17 நிமிடங்களில் இடித்து விட்டனர். என்ன செய்ய வேண்டுமோ, அதை அரை மணி நேரத்துக்குள் செய்து முடித்து விட்டனர்.



    ஆனால், அங்கு ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எவ்வளவு நாளாகும்? ஜனாதிபதி மாளிகையில் இருந்து உத்தரபிரதேச சட்டசபை வரை இதற்கான ஏற்பாடுகளை செய்ய எவ்வளவு காலம் ஆகும்? இரண்டு இடங்களிலும் பா.ஜனதா அரசுகள்தான் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் பா.ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பால்தாக்கரே உத்தரவுப்படி, அயோத்தியில் பாபர் ராஜ்யத்தை சிவசேனா தொண்டர்கள் அகற்றினர். அவர்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் பயமோ, பொறாமையோ கொள்ள வேண்டாம். பெருமைப்படுங்கள். நாங்கள் ராமர் பெயரை சொல்லி, ஓட்டுக்காக பிச்சை பாத்திரம் ஏந்தியது இல்லை. தேர்தலின்போது, வார்த்தை ஜாலத்தில் ஈடுபட்டது இல்லை. ஆனால், நாங்கள் அயோத்திக்கு செல்கிறோம் என்றவுடன், இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவது ஏன்? நாங்கள் அரசியல் நோக்கத்துடன் அங்கு செல்லவில்லை.

    அது, எவருடைய தனிப்பட்ட இடமும் அல்ல. எனவே, எங்கள் மீது சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, ராமர் கோவில் கட்ட தேதியை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ShivSena #RamarTemple
    பூந்தமல்லியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 130 ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தன.

    இந்த கிணறுகளில் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு விற்கப்படுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் வந்தது.

    அதிக அளவில் லாரிகள் செல்வதால் இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. எனவே இதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உதவிகலெக்டர் ரத்னா தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் புனிதவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

    மேலும் அங்கு கொடுக்கப்பட்டு இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போர்வெல், மிஷின்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×