திருப்பூர் பெரிய கடை வீதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
பெரிய கடை வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய காட்சி.
பெரிய கடை வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. சவாரி செயல் பட்டு வரும் கடைகளின் கோடுகள் மற்றும் கடையின் பொருள்களை ரோடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து மெர்சல் ஏற்படுவதோடு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தற்போது ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இததனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

தொடர்ந்து அதிகாரிகள் ரோட்டை அளவீடு செய்யும் போது ஒரு சில பெரிய கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கடை உரிமையாளர்களுக்கு விரைவில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கருத்தை முடித்து அகற்ற வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com