மேட்டுப்பாளையத்தில் 40 ஆண்டுகள் பழமையான பஸ் நிலையம் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றம்

தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
மேட்டுப்பாளையத்தில் 40 ஆண்டுகள் பழமையான பஸ் நிலையம் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றம்
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் 40 ஆண்டுகள் பழமையான பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நுழைவு வாயிலான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கல்விக்காகவும், பணிகளுக்காகவும், கோவை, திருப்பூர், நீலகிரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சுமார் 40 ஆண்டு கால பழமையான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகின்றன. இதனால் தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தர விட்டது.

இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் காரமடை, வெள்ளியங்காடு, அன்னூர், புளியம்பட்டி செல்லும் பஸ்கள் நிற்கும் நிறுத்தத்தில் இருக்கும் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.

இதனை அறிந்த மேட்டுப்பாளையம் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் ஆரிப் உள்ளிட் டோர் கட்டிடங்களின் மேல் தளத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடங்களின் மேல் தளத்தை பயணிகளின் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. முன்னதாக இந்த கட்டிடத்தின் வழியாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் செல்லாதவாறு கயிறுகளை கட்டி நகராட்சி பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com