search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupying houses"

    • சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.
    • பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் காட்டூர் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிநடந்து வருகிறது. ரூ.55 கோடி மதிப்பில் கடந்த 2018-ம்ஆண்டு இந்த பணி தொடங்கப்பட்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.

    இது தொடர்பாக காட்டூர் சாலை அரியன்வாயில் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் 20-க்கும் மேற்பட்ட கடைகள், 17 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்படவில்லை.

    இந்நிலையில் உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் வீடு, கடைகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர். அவர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திர சேகர், பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன் ராஜ், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கவுன்சிலர் அபூபக்கர் ஆகியோர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வருகிற 5-ந் தேதிக்குள் தாங்களே ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்றி கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வீடு, கடைகளை இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    கும்பகோணம் நகரில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு அய்யப்பன் நகர் பகுதியில் ஒலைபட்டினம் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் பகுதிகளை ஒட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் நீர் நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்த ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் கும்பகோணம் நகராட்சி சார்பில் ஒலைபட்டினம் வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக காலிசெய்ய எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி சார்பில் இந்த பகுதி மக்களுக்கு கொற்கை பகுதியில் பட்டாவுடன் வீட்டு மனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொற்கை பகுதியில் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற வேண்டும் என்றும், ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதியை விட்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் முறைப்படி நோட்டீசு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் கும்பகோணம் நகராட்சி ஆணையாளர் உமாமகேஸ்வரி, ஆர்.டி.ஓ. வீராசாமி, தாசில்தார் ஜானகிராமன், மற்றும் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் மற்றும் போலீசார் நால்ரோடு ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு இருந்த மக்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு கூறினார். இதையடுத்து அங்கு வசித்தவர்கள் உடனடியாக தங்களது வீடுகளில் இருந்த டி.வி., கட்டில் மற்றும் பாத்திரங்கள் தளவாட சாமான்களை எடுத்து கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

    இதையடுத்து நகராட்சி சார்பில் ஜெ.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×