search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு-வாக்குவாதம்
    X

    ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு-வாக்குவாதம்

    • சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.
    • பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் காட்டூர் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிநடந்து வருகிறது. ரூ.55 கோடி மதிப்பில் கடந்த 2018-ம்ஆண்டு இந்த பணி தொடங்கப்பட்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.

    இது தொடர்பாக காட்டூர் சாலை அரியன்வாயில் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் 20-க்கும் மேற்பட்ட கடைகள், 17 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்படவில்லை.

    இந்நிலையில் உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் வீடு, கடைகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர். அவர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திர சேகர், பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன் ராஜ், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கவுன்சிலர் அபூபக்கர் ஆகியோர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வருகிற 5-ந் தேதிக்குள் தாங்களே ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்றி கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வீடு, கடைகளை இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    Next Story
    ×