என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயராம் ரமேஷ்"

    • LIC இன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதி முதலீடு.

    அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

    2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது" மற்றும் "மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.

    இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.

    நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?

    2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

    முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது.

    பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இருந்த ரஷ்யா, மத்திய அரசின் வேண்டுகோள்களை புறக்கணித்து, பாகிஸ்தான் நாட்டுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA இயந்திரங்களை வழங்குவதற்கான காரணத்தை மோடி அரசாங்கம் விளக்க வேண்டும்.

    ஆபரேஷன் சிந்தூரின் போது நமது நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானங்களில் JF-17 கூட இருக்கலாம் என்றும் இந்திய விமானப்படை தலைவர் தலைவர் கூறியுள்ளார்.

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேரடி தலையீடுகள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் முன்னேறி வருகிறது. இந்தியாவின் நீண்டகால மற்றும் நம்பகமான கூட்டாளியான ரஷ்யா இப்போது பாகிஸ்தானுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதற்கான காரணத்தை மத்திய அரசு நாட்டுக்கு விளக்க வேண்டும்.

    இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது. பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்த இந்தியாவால் முடியவில்லை. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் அன்புடன் வரவேற்றார். தற்போது ரஷிய அதிபர் புதின் ஆயுதங்களை வழங்குகிறார்" என்று விமர்சித்துள்ளார். 

    • துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது
    • எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருகின்றன.

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. அதன் செயல்திறன் மறுக்க முடியாதது.

    எங்கள் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். 2022 ஆம் ஆண்டில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் 26% வாக்குகளை பெற்றிருந்தது.

    இதன் அடிப்படையில் பாஜகவின் வெற்றி வெறும் எண்ணிக்கை அளவிலானது மட்டுமே ஆகும். உண்மையில் இந்த வெற்றி பாஜகவின் தார்மீக மற்றும் அரசியல் தோல்வியாகும். எங்களின் சித்தாந்தப் போர் நிற்காமல் தொடர்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது பாஜகவின் கொள்கைகளுக்கு சவால் விடுவதாகக் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருவதாகவும், வரும் காலங்களில் இது பாஜகவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறும் என்றும் தெரிவித்தார். 

    • இந்தியா -பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இல்லாத ஒன்று.
    • நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்க வேண்டும்.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

    இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்நிலையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்க வேண்டும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் மத்திய அரசு இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

    எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால் தான் இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி பாரத் என்று பெயரை மாற்றினாலும் அந்த பெயரிலேயே கூட்டணியின் பெயரை மாற்ற தயாராக உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரை பாரத் என்று குறிக்கும் வகையில் நல்லிணக்கம், நட்பு, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை கொண்டு வரும் கூட்டணி (பாரத்) என மாற்றம் செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
    • முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து கூறிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தார். ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால், லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேர்வார்கள். காங்கிரஸை இது எந்த வகையிலும் பாதிக்காது என தெரிவித்துள்ளார்.

    மிலிந்த் தியோராவின் விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தீப் திக்ஷித், "மிலிந்த் தியோராவைப் போன்ற ஒருவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவின் கூட்டணிக் கட்சியில் இணையப்போவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மனிதனுக்கு இரண்டு பெரிய பலவீனங்கள் இருக்கின்றன. பயமும், பேராசையுமே அவை" என தெரிவித்தார்.

    • முஸ்லிம் லீக்கின் சிந்தனை ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது- மோடி
    • வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜி- காங்கிரஸ்

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறுகையில் "பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை. உண்மையில், வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜியைத் தவிர வேறு யாரும் இல்லை. பிரித்தாளும் அரசியலை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும் பாஜக-தான், காங்கிரஸ் அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.

    • நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
    • 'வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது'

    கடந்த ஜூலை [ஜூன் 27] ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவையில் ராகுல் காந்தியின் உரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    கூட்டத்தொடரின் ஆரம்ப கூட்டங்களில் தான் பேசும்போது ஜெகதீப் தன்கர் மைக்கை ஆப் செய்வதாக கார்கே பல முறை குற்றம்சாட்டினார். ஆனால் மைக்கின் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று ஜெகதீப் விளக்கம் அளித்தார். நேற்று முன் தினம் இருவருக்கும் இடையில் சற்று இணக்கம் ஏற்பட்டு அவை கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம். பி பிரமோத் திவாரி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது, ஆளும் பாஜக பல வழிகளில் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சாடினார். இந்த கருத்தை கண்டித்த ஜெகதீப் தன்கர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது என்று தெரிவித்தார். உடனே எழுந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அதை [துரோகத்தை] எங்களால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் பொறுமை இழந்த ஜெகதீப் தன்கர், ஜெயராம் ரமேஷை பார்த்து, நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமை வாய்ந்தவனர், நீங்கள் உடனே வந்து எதிர்கட்சித் தலைவர் கார்கேவின் இடத்தில் அமர்ந்து அவரது வேலையே நீங்களே பார்க்கலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ஜெகதீப் தன்கரின் கருத்தை கண்டிக்கும் வகையில் கார்கே உடனே எழுந்து, வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது, எனவே தான் ஜெயராம் ரமேஷை புத்திசாலி என்று தெரிவிப்பதன்மூலம் தலித் ஆகிய நான் மந்தமான நபர் என்றும் அவர் எனக்கு பதில் இங்கு வந்து அமர வேண்டும் என்றும் கூறுகிறீர்கள் என்று காட்டமாக ஜெகதீப் தன்கரிடம் தெரிவித்தார்.

     

    இதனால் சற்று கலக்கமடைந்த தன்கர், நான் அப்படி கூறவில்லை, எனது கருத்தை நீங்கள் திரித்துக் தவறாக எடுத்துகொண்டீர்கள், உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நீங்கள் இருக்கும்போது ஜெயராம் ரமேஷ் ஏன் பேச வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னேன், நீங்கள் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த கார்கே, என்னை உருவாகியவர் இங்கு உள்ளார் [சோனியா காந்தியை சுட்டிக்காட்டி] மேலும் மக்கள் என்னை உருவாக்கியவர்கள். நீங்களோ ஜெய்ராம் ரமேஷோ என்னை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார். 

     

    • தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
    • செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மாணவர்களின் எதிர்காலத்தை வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாற்றியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீட் தேர்வு ஊழலின் மையமாகத் தேசியத் தேர்வு முகமை உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்துச் செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமையானது தற்போது, மெகா மோசடிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது.


     


    மாணவர்களிடமிருந்து ரூ.3,512.98 கோடி வசூலித்துள்ள NTA, தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    ஆனால் இந்த லாபத்தைத் தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்தப் பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

    • 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக கார்கே குற்றம் சாட்டினார்.
    • சம்பந்தப்பட்ட புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்

    என்சிஆர்டி புத்தகங்களில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எழுப்பிய அவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதிலளித்து பேசியமத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அந்த குற்றச்சாட்டை மறுத்து 6 வகுப்பு பாடத்தில் முகவுரை குறித்த குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தர்மேந்திர பிரதான் கூற்று தவறானது என்றும் மாநிலங்களவையில் தவறான செய்திகளை தந்திருக்கிறார் என்றும் அவர் மீது காங்கிரஸ் நோட்டிஸ் விடுத்துள்ளது.

    நேற்று மாநிலங்களவைத் சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் இது தொடர்பான கடிதத்தை, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வழங்கினார். அதில், தர்மேந்திர பிரதானின் கூற்று பொய்யானது என்றும் அவையைத் தவறாக வழிநடத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதற்குச் சான்றளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மாநிலங்களவையில் தவறான தகவல்களை வழங்கிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரிதான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜெகதீப் தன்கரை ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தினார்.  

    • சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என சாம் பிட்ரோடா தெரிவித்தார்
    • சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.

    அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.

    இந்நிலையில், சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பேட்டி ஒன்றில் சாம் பிட்ரோடாவிடம் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

    அதற்கு பதில் அளித்த அவர், "சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக உள்ளது. மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்நிலையில், சீனா குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கள், இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் வரி வருவாய் குறித்த பட்டியலை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.
    • பொதுமக்களிடம் வசூலித்த வரி வருவாய் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

    மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை விட மக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வரி வருவாய் பெறுவதை விளக்கும் பட்டியலை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

    அதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி வருவாய் 40 சதவீதமாக உள்ளதாகவும் அதுவே பொதுமக்களிடமிருந்து பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக உள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

    கடந்த 2021 ஆண்டு கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து தற்போதைய மத்திய அரசு பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக குறைந்திருப்பதும், அதே நேரத்தில் பொதுமக்களிடமிருந்து வசூலித்த வரி வருவாய் 48 சதவீதமாக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மக்கள் மீது வரியை உயர்த்து, நண்பர்களுக்கு வரியை குறை, இதுதான் சூட்-பூட்-சர்க்காரின் செயல்பாடு என்று ராகுல்காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


    இதனிடையே, அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய நிதி மந்திரிக்கு எழுதியிருந்த கடிதத்தை தமது டுவிட்டர் பதிவில் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

    ×