search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Session"

    • காளீஸ்வரி கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது.
    • பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும்போது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வேண்டும் என்றார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த தனியார் உணவு நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன மேலாளர் பொன்மொழியன், நிறுவனத்தின் நோக்கம்- அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.

    பின் நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களைஎழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்தார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் இதற்கான ஏற்பாடை செய்திருந்தார். மேலும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துைைழப்புடன் வளாகத் தேர்வு நடந்தது. மாரீஸ்வரன் நன்றி கூறினார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளின் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கணினி அறிவியல் துறையின் துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான பிரியா தனது ஆய்வு கட்டுரையான "மல்டி கோரை பயன்படுத்தி திறமையான இணையான நீள்வட்ட வளைவு குறியாக்கவியல்" பற்றிய தகவல்களை கூறினார்.

    அவர், பல மைய அமைப்பு,நீள்வட்ட வளைவு குறியாக்கவியல், இணையான மற்றும் திறமையான அல்காரிதத்தை அபைன் பாயிண்ட் உருவாக்கத்திற்காக நீள்வட்ட வளைவு குறியாக்கவியல் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் பேசினார்.

    இதில் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறைகளைச் சேர்ந்த அனைத்து உதவிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ரேவதீஸ்வரி வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சவும்யா நன்றி கூறினார்.

    மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.#TNAssembly
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் ஜனவரி 8-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெற்றது. அதன்பின்னர், சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12-ந் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 15-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது.

    அன்று பிற்பகல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கும் முதல் நாளில்  வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க இருக்கின்றனர்.

    தொடர்ந்து, ஜூலை மாதம் 9-ந் தேதி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 26-ந் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார்.

    இடையில், ஜூன் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையையும் எழுப்ப இருக்கிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத் தொடரில், தினமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.#TNAssembly
    ×